Latest News :

12 மாதங்களில் 800 கோடி! - அசத்தும் ரன்வீர் சிங்
Friday June-21 2019

பத்மாவத் வெளியீட்டில் தொடங்கி பாக்ஸ் ஆபிஸில் 1 வருடம் வெற்றி படங்களை தர வேண்டும் என கனவு கண்டார் ரன்வீர் சிங்.  அவர் சஞ்சய் லீலா பன்சாலியின் 'பத்மாவத்' உடன் மூன்று பேக் டு பேக் "பிளாக் பஸ்டர்களை" வழங்கினார்.  'பத்மாவத்', ரோஹித் ஷெட்டியின் 'சிம்பா', மற்றும் சோயா அக்தரின் 'கல்லி பாய்' ஆகிய படங்களில் 12 மாத காலப்பகுதியில், இந்திய பாக்ஸ் ஆபிஸில் 800 கோடி ரூபாயை நெருங்கினார்.  தற்போது ஒரு சூப்பர் ஸ்டாராக புகழப்படும், ரன்வீர் ரசிகர்களின் இதய துடிப்பாக திகழ்கிறார், அவர் திரையில் அடுத்து எப்படி வரவிருக்கிறார் என்று பார்க்க பார்வையாளர்கள் காத்திருக்கிறார்கள்.

 

ரன்வீர் இது பற்றி நம்மிடம் கூறும் முன்  சிம்பா   படத்தின் வசனங்களை தற்போது உள்ள நிலைக்கு பொருந்துவதற்கேற்ப கூறியுள்ளார், “ஹை மேன் மைதீன் கே நஹி புகார் கா புகா ஹூன். நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இந்த வெற்றி படங்களின் தயாரிப்பாளர்களுக்கு லாபம் ஈட்டி தந்ததற்கும், என் மீது நம்பிக்கை வைத்து என்னை ஆதரித்தார்கள். அனைவரும் வாய்ப்பு பெறுகிறார்கள்.  திரைப்பட துறையில் பங்களிப்பு செய்ய முடிந்து, எனது சிறிய வழியில் செல்லும் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்”.

 

மேலும் அவர்,  ”நான் படங்கள் மற்றும் திரைப்படதுறையை மிகவும் நேசிக்கிறேன். இந்த துறையில் முன்னிலையில் இருக்க நான் விரும்புகிறேன். எனக்கு இந்தி சினிமா, இந்தி படங்கள், இந்தி திரைப்பட துறை மேலும் மேலும் வளர வேண்டும். இந்த துறையில் நான் நிலைத்து நிற்க வேண்டும் இதுவே என் விருப்பம்.  இந்த சினிமா துறை தான் எனக்கு வாய்ப்பு தந்தது. என்னுடைய வயிற்றிற்காக நான் உழைக்கிறேன். என் குடும்பத்தினரும் இதில் தான் சம்பாதிக்கின்றனர். என்னுடைய விருப்பமான துறை இதுவே. நாம் அனைவரும் பொதுவானவரே. இந்த துறையில் நான் செழிக்க வேண்டும் என்று விரும்புகிறேன். இந்த இந்தி சினிமா துறையின் வளர்ச்சிக்காக நான் கடினமாக உழைக்கவும் தயாராக இருக்கிறேன்.  அது எனக்கு பெருமையே” என ரன்வீர் சிங் விவரித்தார்.

Related News

5119

‘Thandakaaranyam’ Now Streaming on Amazon Prime Video!
Sunday November-23 2025

VR Dinesh and Kalaiyarasan’s recently released socio-political drama Thandakaaranyam is now streaming on Amazon Prime Video, and the film is witnessing a fresh wave of attention and conversations across India...

இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் தொடக்க திரைப்படமாக தேர்வான ‘அமரன்’!
Saturday November-22 2025

ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் மற்றும் டர்மெரிக் மீடியா தயாரிப்பில் உருவாகி, பரவலாக பாராட்டப்பட்ட ’அமரன்’ திரைப்படம், கோவாவில் நடைபெறும் 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் (IFFI) இந்தியன் பனோரமா பிரிவில் தொடக்க திரைப்படமாக அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது...

ரசிகர்கள் நிராகரிப்பு, காட்சிகள் ரத்து! - படுதோல்வியடைந்த கவினின் ‘மாஸ்க்’!
Saturday November-22 2025

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு அறிமுகமாகி உச்ச நடிகர்களாக உயர்ந்தவர்கள் போல், தானும் உச்சத்தை தொட்டு விடலாம் என்ற நம்பிக்கையோடு வெள்ளித்திரையில் நுழைந்த கவின், ஒரு வெற்றி படத்தை கொடுத்து விட்டு தனது செயலில் அதிரடி காட்ட தொடங்கினார்...

Recent Gallery