சினிமாவில் நடிகைகளுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் அதிகரித்து வருவதாகவும், வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் அதிகரித்து வருவதாகவும் பல நடிகைகள் பேட்டியில் கூறி வருகிறார்கள். முன்னணி நடிகைகள் முதல் சிறிய வேடங்களில் நடிக்கும் நடிகைகள் வரை இதுபோன்ற புகார்களை தெரிவித்து வரும் நிலையில், தற்போது சீரியல்களிலும் நடிகைகளுக்கு எதிராக பல கொடுமைகள் நடைபெறுவதாக கூறப்படுகிறது.
அந்த வகையில், சீரியல்களில் தமிழ் நடிகைகளுக்கு நடக்கும் கொடுமை குறித்து விஜய் டிவி சீரியலில் நடித்து வரும் நடிகை ஒருவர் மனம் திறந்து பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடர் ரசிகர்களிடம் வரவேற்பு பெற்ற தொடர்களில் ஒன்றாகும். இதில், முல்லை என்ற ரோலில் நடிக்கும் சித்ரா என்பவர் மக்களை வெகுவாக கவர்ந்ததோடு, தனக்கென்று பெரிய ரசிகர்கள் வட்டத்தையே கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில், பிரபல வார இதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்த சித்ரா, சீரியல்களில் நடிகைகளுக்கு எதிராக நடக்கும் கொடுமை குறித்து மிக கோபமாக பேசியிருக்கிறார்.
அதாவது, பல சீரியல்களில் தமிழ் பெண்களுக்கு வாய்ப்புகள் கொடுக்காமல், கேரளா, கர்நாடக என வேறு மாநில பெண்களுக்கு தான் வாய்ப்புகள் கொடுக்கிறார்களாம். அதற்கு காரணம், அவர்கள் வெள்ளையாக இருப்பதாக கூறுகிறார்களாம்.
“நான் ரொம்ப கலர் கிடையாது, டஸ்கி கலர்தான். ஆனா, இதுவும் அழகுதேனே, நம்ம ஆளுங்க ஏன் வெள்ளையா இருக்கிற பொண்ணுங்களுக்கே முக்கியத்துவம் கொடுக்குறாங்கனு தெரியல” என்று கோபமாக கேள்வி எழுப்பியிருக்கும் சித்ராவின் இந்த பேட்டியால் சின்னத்திரை ஏரியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளதாம்.
அட்லர் எண்டர்டெயின்மெண்ட் (Adler Entertainment) தயாரிப்பில், அறிமுக இயக்குநர் நவீத் s ஃபரீத் இயக்கத்தில், நிஷாந்த் ரூஷோ, வர்ஷிணி, ஷாலினி நடிப்பில், இன்றைய தலைமுறையின் கதையில், கலக்கலான காமெடி எண்டர்டெயினராக உருவாகியுள்ள திரைப்படம் ’சொட்ட சொட்ட நனையுது’...
ஜெர்ரி'ஸ் ஜர்னி இண்டர்நேஷனல் புரொடக்ஷன் ஹவுஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ஜுன் மோசஸ் இயக்கத்தில் அறிமுக நடிகர் வினோத் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'பேய் கதை' படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் சென்னையில் வெளியிடப்பட்டது...
இங்கிலாந்து நாட்டு ஆங்கில திரைப்படமாக உருவாகியிருக்கும் ‘இன்ஃபிளுன்செர்’ உண்மையான திகில் எது ? என்பதை விவரிக்கும் பரபரப்பான சஸ்பென்ஸ் திரில்லர் மற்றும் திகில் படமாகும்...