தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குநர் மற்றும் நடிகர்களில் ஒருவராக உள்ள பார்த்திபன், தனக்கென்று தனி பாதையை வகுத்துக் கொண்டு பயணிப்பவர். அவர் இயக்கும் படங்கள், பேசும் வசனங்கள் மட்டும் இன்றி நிஜ வாழ்க்கையிலும் வித்தியாசத்தை கடைபிடித்து வருகிறார்.
தற்போது, ‘ஒத்த செருப்பு சைஸ் 7’ என்ற தலைப்பில் ஒரே ஒரு கதாபாத்திரம் மட்டுமே படம் முழுவதும் வருவது போன்ற வித்தியாசமான படத்தை பார்த்திபன் இயக்கி நடித்திருக்கிறார்.
இந்த நிலையில், நடிகை சீதாவை விவாகரத்து செய்து பிரிந்த நடிகர் பார்த்திபன் பேட்டி ஒன்றில் இரண்டாவது திருமணம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.
சீதாவை பிரிந்த பிறகு ஏன் இரண்டாவது திருமணம் செய்யவில்லை? என்று அவரிடம் கேட்டதற்கு, “கண்டிப்பாக என் இரண்டு மகளுக்கு திருமணம் முடிந்துவிட்டது, அடுத்து என் மகன் இருக்கிறார், அவர் திருமணம் முடிந்ததும் என் திருமணம் தான்.” என்று விளையாட்டாக பதில் அளித்தார்.
மேலும், தற்போது தனக்கு இனி திருமணம் வேண்டாம், என்று கூறியவர், வாழ்க்கையில் ஒரு நல்ல பார்ட்னர் இருந்தால் போதும், என்றும் கூறினார்.
VR Dinesh and Kalaiyarasan’s recently released socio-political drama Thandakaaranyam is now streaming on Amazon Prime Video, and the film is witnessing a fresh wave of attention and conversations across India...
ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் மற்றும் டர்மெரிக் மீடியா தயாரிப்பில் உருவாகி, பரவலாக பாராட்டப்பட்ட ’அமரன்’ திரைப்படம், கோவாவில் நடைபெறும் 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் (IFFI) இந்தியன் பனோரமா பிரிவில் தொடக்க திரைப்படமாக அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது...
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு அறிமுகமாகி உச்ச நடிகர்களாக உயர்ந்தவர்கள் போல், தானும் உச்சத்தை தொட்டு விடலாம் என்ற நம்பிக்கையோடு வெள்ளித்திரையில் நுழைந்த கவின், ஒரு வெற்றி படத்தை கொடுத்து விட்டு தனது செயலில் அதிரடி காட்ட தொடங்கினார்...