தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குநர் மற்றும் நடிகர்களில் ஒருவராக உள்ள பார்த்திபன், தனக்கென்று தனி பாதையை வகுத்துக் கொண்டு பயணிப்பவர். அவர் இயக்கும் படங்கள், பேசும் வசனங்கள் மட்டும் இன்றி நிஜ வாழ்க்கையிலும் வித்தியாசத்தை கடைபிடித்து வருகிறார்.
தற்போது, ‘ஒத்த செருப்பு சைஸ் 7’ என்ற தலைப்பில் ஒரே ஒரு கதாபாத்திரம் மட்டுமே படம் முழுவதும் வருவது போன்ற வித்தியாசமான படத்தை பார்த்திபன் இயக்கி நடித்திருக்கிறார்.
இந்த நிலையில், நடிகை சீதாவை விவாகரத்து செய்து பிரிந்த நடிகர் பார்த்திபன் பேட்டி ஒன்றில் இரண்டாவது திருமணம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.
சீதாவை பிரிந்த பிறகு ஏன் இரண்டாவது திருமணம் செய்யவில்லை? என்று அவரிடம் கேட்டதற்கு, “கண்டிப்பாக என் இரண்டு மகளுக்கு திருமணம் முடிந்துவிட்டது, அடுத்து என் மகன் இருக்கிறார், அவர் திருமணம் முடிந்ததும் என் திருமணம் தான்.” என்று விளையாட்டாக பதில் அளித்தார்.
மேலும், தற்போது தனக்கு இனி திருமணம் வேண்டாம், என்று கூறியவர், வாழ்க்கையில் ஒரு நல்ல பார்ட்னர் இருந்தால் போதும், என்றும் கூறினார்.
அட்லர் எண்டர்டெயின்மெண்ட் (Adler Entertainment) தயாரிப்பில், அறிமுக இயக்குநர் நவீத் s ஃபரீத் இயக்கத்தில், நிஷாந்த் ரூஷோ, வர்ஷிணி, ஷாலினி நடிப்பில், இன்றைய தலைமுறையின் கதையில், கலக்கலான காமெடி எண்டர்டெயினராக உருவாகியுள்ள திரைப்படம் ’சொட்ட சொட்ட நனையுது’...
ஜெர்ரி'ஸ் ஜர்னி இண்டர்நேஷனல் புரொடக்ஷன் ஹவுஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ஜுன் மோசஸ் இயக்கத்தில் அறிமுக நடிகர் வினோத் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'பேய் கதை' படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் சென்னையில் வெளியிடப்பட்டது...
இங்கிலாந்து நாட்டு ஆங்கில திரைப்படமாக உருவாகியிருக்கும் ‘இன்ஃபிளுன்செர்’ உண்மையான திகில் எது ? என்பதை விவரிக்கும் பரபரப்பான சஸ்பென்ஸ் திரில்லர் மற்றும் திகில் படமாகும்...