தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களில் ஒருவரான விஜய் சேதுபதி, வருடத்திற்கு இரண்டு வெற்றிப் படங்களைக் கொடுத்து விடுகிறார். இதனால் இவரது படங்களுக்கு ரசிகர்களுக்கு மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பு ஏற்படுகிறது.
அந்த வகையில், அருண்குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியிருக்கும் ‘சிந்துபாத்’ ரசிகர்களிடம் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், படம் அறிவித்த நாளில் வெளியாகமல் போனது. காரணம், தயாரிப்பாளரின் பழைய கடன் தான். பிறகு பேச்சுவார்த்தை நடத்தி, கொடுப்பதை கொடுத்து பிரச்சினையை முடித்த படக்குழு, படத்தை வரும் ஜூன் 28 ஆம் தேதி வெளியிடுவதாக அறிவித்தனர்.
ஆனால், இதற்கு நடிகையும் இயக்குநருமான லட்சுமி ராமகிருஷ்ணன் எதிர்ப்பு தெரிவித்தார். ஏற்கனவே வெளியாக வேண்டிய படங்கள் இருக்கும் போது விஜய் சேதுபதியின் சிந்துபாத் திடீரென்று ரிலீஸ் தேதியை மாற்றியதால் தங்களது படங்களுக்கு பிரச்சினை எழுந்துள்ளதாகவும், போதிய திரையரங்குகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும், என்றும் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், விஜய் சேதுபதியின் படம் அறிவித்தது போல ஜூன் 28 ஆம் தேதியும் வெளியாகாத சூழல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே பிரச்சினையை தீர்க்க விஜய் சேதுபதி ரூ.1 கோடி கொடுத்தாலும், தயாரிப்பாளரின் பழைய கணக்கு தீரவில்லையாம். இதனால் படத்தை 28 ஆம் தேதியும் வெளியிட விடமாட்டார்கள் என்று கூறப்படுகிறது.
விஜய் சேதுபதியின் மகன் சூர்யா முதல் முறையாக நடித்திருப்பதாலும், ஏற்கனவே விஜய் சேதுபதிக்கு இரண்டு வெற்றிப் படங்களை கொடுத்த அருண்குமார் இயக்கியிருப்பதாலும், படத்தின் மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருந்த விஜய் சேதுபதி, தனது பணத்தை கொடுத்து கணக்கை செட்டில் செய்து வெளியீட்டிற்கு உதவினாலும், பிரச்சினை தொடர்ந்து நீடிப்பதால் செக கடுப்பில் இருக்கிறாராம்.
இந்த படம் மட்டும் அல்ல, விஜய் சேதுபதியின் ஒவ்வொரு படமும் ரிலீஸின் போது இப்படி தான் பிரச்சினையில் சிக்கிக் கொள்கிறது. தன்னை வைத்து படம் தயாரிக்கும் தயாரிப்பாளர்கள் வாங்கிய பழைய கடனால், தனது படங்கள் பாதிக்கப்படுவதாலும், அதை சரிக்கட்ட கோடி கோடியாக கொடுத்தாலும், பிரச்சினை மட்டும் தொடர்ந்துக் கொண்டே இருப்பதால் விஜய் சேதுபதி ரொம்பவே அப்செட்டாகியுள்ளாராம்.
VR Dinesh and Kalaiyarasan’s recently released socio-political drama Thandakaaranyam is now streaming on Amazon Prime Video, and the film is witnessing a fresh wave of attention and conversations across India...
ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் மற்றும் டர்மெரிக் மீடியா தயாரிப்பில் உருவாகி, பரவலாக பாராட்டப்பட்ட ’அமரன்’ திரைப்படம், கோவாவில் நடைபெறும் 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் (IFFI) இந்தியன் பனோரமா பிரிவில் தொடக்க திரைப்படமாக அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது...
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு அறிமுகமாகி உச்ச நடிகர்களாக உயர்ந்தவர்கள் போல், தானும் உச்சத்தை தொட்டு விடலாம் என்ற நம்பிக்கையோடு வெள்ளித்திரையில் நுழைந்த கவின், ஒரு வெற்றி படத்தை கொடுத்து விட்டு தனது செயலில் அதிரடி காட்ட தொடங்கினார்...