ரசிகர்கள் வேண்டாம், படத்தின் புரோமோஷனில் பங்கேற்க மாட்டேன், இருந்தாலும் என் படம் ஜெயிக்கும் என்று ஓவர் கான்பிடண்டின் இருந்த அஜித்துக்கும், அஜித் போன்ற பெரிய ஹீரோவை வைத்து படம் எடுத்துவிட்டால் போதும் படம் தன்னால் ஓடிவிடும் என்ற நம்பிக்கையில் இருந்த தயாரிப்பாளர்களுக்கும் ‘விவேகம்’ பெரிய பாடம் கற்பித்துள்ளது.
எந்த அளவுக்கு ரசிகர்களிடம் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியதோடு, அதை விடவும் மிக்கபெரிய தோல்வியை சந்தித்த ‘விவேகம்’ படத்தால், கோடம்பாக்கத்து முன்னணி ஹீரோக்களும், தயாரிப்பு நிறுவனங்களும் சரியான பாடம் கற்றுக்கொண்டிருக்கின்றனர்.
இப்போது சேதி இதுவல்ல, அதாவது விவேகம் தோல்வியால் பட்ட காயத்தின் ரனம் ஆறுவதற்கு முன்பாக அடுத்த படத்தின் அறிவிப்பை வெளியிட்டு கோடம்பாக்கத்தின் கவனத்தை தன் பக்கம் ஈர்க்க நினைத்த அஜித்துக்கு படப்பிடிப்பில் ஏற்பட்ட சில காயங்களினால் வலி அதிகரித்ததால், உடனடியாக ஆபரேஷன் செய்ய மருத்துவர்கள் அறிவுத்தினார்கள். அதன்படி, கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அறுவை சிகிச்சை முடிந்ததும் எழுந்து நடக்ககூடிய அளவுக்கு அஜித் தயாராகி விட்டார்.
இதனால், அவர் தனது அடுத்த படத்தின் வேலையில் தீவிரம் காட்டுவார் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், அந்த படத்தை அஜித் டிராப் செய்துள்ளார். அதாவது மூன்று மாதத்திற்கு அஜித் எந்த படப்பிடிப்பிலும் கலந்துக்கொள்ள மாட்டார். தற்போது அவர் குறைந்தது மூன்று மாதங்கள் ஓய்வு எடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். அவர்களது அறிவுரைக்கு கட்டுப்பட்ட அஜித், இப்போதைக்கு அடுத்த படம் இல்லை, என்று கூறிவிட்டாராம்.
ஆக, 3 மாதங்கள் ஓய்வில் இருக்கும் அஜித் மூன்று மாதங்களுக்கு பிறகே தனது அடுத்த படம் குறித்தும், அதை இயக்கும் இயக்குநர் குறித்தும் யோசிக்க உள்ளாராம்.
ஜியோ ஹாட்ஸ்டார் ஸ்பெஷலாக வெளியாகி இருக்கும் இணையத் தொடர் ‘குட் வொய்ஃப்’...
அஸ்யூர் பிலிம்ஸ் மற்றும் ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், சக்தி பிலிம் ஃபேக்டரி வெளியீட்டில், அறிமுக இயக்குநர் சண்முகபிரியன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, சுஷ்மிதா பட், மீனாட்சி தினேஷ், அருள்தாஸ், ரமேஷ் திலக், முருகானந்தம் உள்ளிட்ட பலரது நடிப்பில் வெளியான 'லவ் மேரேஜ்' திரைப்படம் - ரசிகர்களின் பேராதரவுடன் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
தன்வீர் தயானந்த யோகி ஜெயந்தி விழா ஜூலை 2 ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்ட நிலையில், இவ்விழாவை முன்னிட்டு ’தெய்வீக அற்புதங்களும் மற்றும் ரகசியங்களும்’ என்று சொல்லக்கூடிய ‘டிவைன் மிராக்கல் அண்ட் சீக்ரெட்ஸ்’ (Divine Miracles and Secrets - Part 2) என்ற புத்தகத்தின் இரண்டாம் பாகம் வெளியிடப்பட்டது...