சீரியல் மற்றும் திரைப்படங்களில் நடித்து வரும் நடிகை ரேஷ்மா, தற்போது பிக் பாஸ் வீட்டில் இருக்கிறார். ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்’ படத்தில் புஷ்பா என்ற வேடத்தில் நடித்து பிரபலமான இவருக்கும், யோகி பாபுவுக்கும் காதல் இருப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டிருக்கிறார்.
தற்போது பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு டாஸ்க்குகள் கொடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி, ”வாழ்க்கையில் மறக்க முடியாத சோகமான சம்பவம்” குறித்து சொல்லும்படி ரேஷ்மாவுக்கு டாஸ்க் கொடுக்க, அதை பாத்திமா பாபு வாசிக்கிறார்.
உடனே கண் கலங்கிய ரேஷ்மா, தனது வாழ்க்கையில் நடந்த சோகமான சம்பவங்களை சொல்ல சொல்ல, ஒட்டு மொத்த பிக் பாஸ் வீடே கண்ணீரில் தத்தளித்து சோகமாகிவிட்டது.

அதாவது, ரேஷ்மாவுக்கு கல்யாணம் ஆகி விவாகரத்து ஆனதோடு, 9 மாதம் அவர் கர்ப்பமாக இருந்தபோதே குழந்தை இறந்துவிட்டதாம். இதுவரை வெளியே தெரியாத இந்த விஷயத்தை ரேஷ்மா முதல் முறையாக பிக் பாஸ் வீட்டில் கூறியிருக்கிறார்.
தற்போது புரோமோவாக இது ஒளிபரப்பாகி வரும் நிலையில், இன்று இரவு ரேஷ்மாவின் வாழ்க்கை நடந்த சோகம் விஜய் டிவிக்கு பெரிய டி.ஆர்.பி யை தரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
#பிக்பாஸ் இல்லத்தில் இன்று.. #BiggBossTamil - தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3 #VijayTelevision pic.twitter.com/l5hfhk1n4a
— Vijay Television (@vijaytelevision) June 26, 2019
VR Dinesh and Kalaiyarasan’s recently released socio-political drama Thandakaaranyam is now streaming on Amazon Prime Video, and the film is witnessing a fresh wave of attention and conversations across India...
ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் மற்றும் டர்மெரிக் மீடியா தயாரிப்பில் உருவாகி, பரவலாக பாராட்டப்பட்ட ’அமரன்’ திரைப்படம், கோவாவில் நடைபெறும் 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் (IFFI) இந்தியன் பனோரமா பிரிவில் தொடக்க திரைப்படமாக அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது...
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு அறிமுகமாகி உச்ச நடிகர்களாக உயர்ந்தவர்கள் போல், தானும் உச்சத்தை தொட்டு விடலாம் என்ற நம்பிக்கையோடு வெள்ளித்திரையில் நுழைந்த கவின், ஒரு வெற்றி படத்தை கொடுத்து விட்டு தனது செயலில் அதிரடி காட்ட தொடங்கினார்...