விஜய் சேதுபதி படங்கள் தொடர்ந்து வெற்றிப் பெற்றாலும், அவரது படங்களின் ரிலீஸின் போது எழும் பிரச்சினைகளும் தொடர் கதையாகி வருகிறது.
விஜய் சேதுபதியின் ஒவ்வொரு படத்தின் ரிலீஸின் போதும், அப்படத்தின் தயாரிப்பாளர்களால் பிரச்சினை ஏற்பட்டு படம் சொன்ன தேதியில் வெளியாவதில் சிக்கல் ஏற்படுகிறது. அந்த வகையில், இன்று வெளியாக இருந்த ‘சிந்துபாந்த்’ படமும் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே அறிவித்த தேதியில் சிந்துபாத் படத்தை ரிலீஸ் செய்ய முடியாமல் போனதால், விஜய் சேதுபதி மூலம் பிரச்சினை தீர்க்கப்பட்டு பிறகு வேறு தேதி அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று (ஜூன் 27) படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையிலும், பிரச்சினை தீராததால், படம் வெளியாவதில் சிக்கல் தொடர்கிறது, என்று தகவல் வெளியானது.
ஆனால், படக்குழுவினரோ படம் நிச்சயம் வெளியாகும் என்று கூறி வந்த நிலையில், இன்று காலை 8 மணிக்கு திரையரங்கத்திற்கு சென்ற விஜய் சேதுபதி ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. ஆம், சிந்துபாத் 8 மணி காட்சி வெளியாகவில்லை. இதன் பிறகு 12 மணி காட்சி வெளியாகுமா அல்லது படம் இன்று வெளியாகமலே போய்விடுமா என்பதில் பெரும் குழப்பம் நிலவிவருகிறது.
இப்படி தொடர்ந்து தனது படங்களுக்கு வரும் பிரச்சினையால் விஜய் சேதுபதி சோகமடைந்திருக்க, அவரது ரசிகர்களோ அதிர்ச்சியடைந்திருக்கிறார்கள்.
அட்லர் எண்டர்டெயின்மெண்ட் (Adler Entertainment) தயாரிப்பில், அறிமுக இயக்குநர் நவீத் s ஃபரீத் இயக்கத்தில், நிஷாந்த் ரூஷோ, வர்ஷிணி, ஷாலினி நடிப்பில், இன்றைய தலைமுறையின் கதையில், கலக்கலான காமெடி எண்டர்டெயினராக உருவாகியுள்ள திரைப்படம் ’சொட்ட சொட்ட நனையுது’...
ஜெர்ரி'ஸ் ஜர்னி இண்டர்நேஷனல் புரொடக்ஷன் ஹவுஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ஜுன் மோசஸ் இயக்கத்தில் அறிமுக நடிகர் வினோத் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'பேய் கதை' படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் சென்னையில் வெளியிடப்பட்டது...
இங்கிலாந்து நாட்டு ஆங்கில திரைப்படமாக உருவாகியிருக்கும் ‘இன்ஃபிளுன்செர்’ உண்மையான திகில் எது ? என்பதை விவரிக்கும் பரபரப்பான சஸ்பென்ஸ் திரில்லர் மற்றும் திகில் படமாகும்...