சிம்பு என்றாலே வம்பு, என்று கோலிவுட்டில் சொல்லாதவரகளே இருக்க முடியாது. அந்த அளவுக்கு தனது பெயரை டேமேஜ் செய்து வைத்திருக்கும் சிம்பு, ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தின் தோல்விக்குப் பிறகு தனது வாலை சுருட்டி வைத்துக் கொண்டு சமத்து பிள்ளையாக வேலை பார்ப்பதாக கூறப்பட்டது.
அதற்கு ஏற்றவாறு சில இயக்குநர்களும், தயாரிப்பாளர்களும் சிம்புவுக்கு நற்சான்றிதழ் வழங்கினார்கள். இதனால் சிம்புவை வைத்து படம் தயாரிக்க சில தயாரிப்பாளர்கள் முன் வந்தார்கள்.
இந்த நிலையில், சிம்பு தனது வம்புத்தனத்தை மீண்டும் தொடங்கிவிட்டதாகவும், அதனால் தயாரிப்பாளர் ஒருவர் படாதபாடு படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது, ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கும் ’மாப்டி’ என்ற கன்னட படத்தின் தமிம் ரீமேக்கில் சிம்பு நடித்து வருகிறார். கெளதம் கார்த்திக் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் சிம்பு வில்லனாக நடிக்கிறார். இதற்காக சிம்புவுக்கு பெரிய தொகை சம்பளமாக வழங்கப்பட்டிருக்கிறதாம்.
இந்த பெரிய தொகை சம்பளத்தை கொடுத்தும் சிம்பு தயாரிப்பாளருக்கு கூடுதல் செலவு வைப்பதோடு, படப்பிடிப்பில் சரியாக கலந்துக் கொள்ளாமல் டார்ச்சர் செய்கிறாராம்.
தன்னுடைய மேக்கப் பெண்கள் 2 பேர் மற்றும் தனது நண்பர்கள் 8 பேர் என மொத்தம் 10 பேரை ஸ்டார் ஓட்டலில் தங்க வைத்து தினமும் மது, உணவு என தடபுடலான விருந்து வைப்பவர், அந்த பில்லை தயாரிப்பாளர் தலையில் கட்டிவிடுகிறாராம்.
மேலும், படப்பிடிப்பை இரவில் வைத்தால் தான் வருவேன், என்றும் தொல்லை கொடுக்கிறார். சிம்புவின் இந்த வம்புத்தனம் குறித்து தயாரிப்பாளர் தனது நெருக்கமானவர்களிடம் புலம்ப, தற்போது அது வார இதழ் ஒன்றில் செய்தியாக வெளியாகியிருக்கிறது.
VR Dinesh and Kalaiyarasan’s recently released socio-political drama Thandakaaranyam is now streaming on Amazon Prime Video, and the film is witnessing a fresh wave of attention and conversations across India...
ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் மற்றும் டர்மெரிக் மீடியா தயாரிப்பில் உருவாகி, பரவலாக பாராட்டப்பட்ட ’அமரன்’ திரைப்படம், கோவாவில் நடைபெறும் 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் (IFFI) இந்தியன் பனோரமா பிரிவில் தொடக்க திரைப்படமாக அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது...
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு அறிமுகமாகி உச்ச நடிகர்களாக உயர்ந்தவர்கள் போல், தானும் உச்சத்தை தொட்டு விடலாம் என்ற நம்பிக்கையோடு வெள்ளித்திரையில் நுழைந்த கவின், ஒரு வெற்றி படத்தை கொடுத்து விட்டு தனது செயலில் அதிரடி காட்ட தொடங்கினார்...