Latest News :

களத்தில் இறங்கிய ஏ.ஆர்.ரஹ்மானின் மகன்!
Sunday June-30 2019

ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மானின் மகன் ஏ.ஆர்.அமீன், தனது தந்தையுடன் இணைந்து தனது இசைப் பயணத்தை தொடங்கியதன் மூலம் அவரும் இசையுலகில் களம் இறங்கியுள்ளார்.

 

சோனி மீயூசிக் நிறுவனத்துடன் இணைந்து ஏ.ஆர்.அமீன் தனது முதல் இசைப் பதிவான சகோவை வெளியிட்டிருக்கிறார். அமீனின் குரலில் உருவான இப்பாடல் காதல் பற்றியும், நட்பைப் பற்றியும் பேசும் பாடலாக உள்ளது. இதற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, விவேக் மற்றும் ஏ.டி.கே ஆகியோர் இணைந்து வரிகள் எழுதியுள்ளனர்.

 

தனது தந்தை ஏ.ஆர்.ரஹ்மானுடன் இணைந்து அமீன் தயாரித்திருக்கும் இப்பாடலின் முழு வீடியோவை அமித் கிருஷ்ணன் இயக்கியிருக்கிறார்.

 

அனைவரது உள்ளத்தை கொள்ளை கொள்ளும் இப்பாடல் குறித்து அமீன் கூறுகையில், “நான் என் இசைப் பயணத்தை சகோ உடன் தொடங்குவதில் பெரும் மகிழ்ச்சியும் உற்சாகமும் கொள்கிறேன். இப்பாடலை தந்தையுடன் சேர்ந்து தயாரிப்பது பெரும் சவாலாக இருந்தது. ஆனால், அதே சமயம் பெரும் மகிழ்ச்சியையும் அளித்தது. மக்கள் என் பாடலைப் பற்றி என்ன கருதுகிறார்கள் என்பதைப் பற்றி அறிய ஆவலாக இருக்கிறேன். ஓர் அன்பான வரவேற்ப்பை பெறுவேன் என்று நம்புகிறேன்.” என்றார்.

 

ஏ.ஆர்.ரஹ்மான் மகனின் பாடல் குறித்து கூறுகையில், “ஒரு இசை அமைப்பாளராகவும் ஒரு இசை தயாரிப்பாளராகவும் நூற்றுக்கணக்கான பாடகர்கள் எனது பாடல்களின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறார்கள். அவ்வாறு அறிமுகப்படுத்தப்பட்ட அவர்களின் பங்களிப்பு 25 ஆண்டுகளுக்கும் மேலாக நமது வாழ்வை இசை வழியே மேம்பட செய்திருக்கின்றன. ஏ.ஆர்.அமீனுக்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதோடு இப்பாடல் அனைத்து இசை ரசிகர்களின் உள்ளத்திலும் ஒரு தனி இடத்தை பிடிக்கும் என நம்புகிறேன்.” என்றார்.

 

அமீனின் இந்த முதல் பாடல் நிச்சயம் அவருக்கு சிறந்த பாடகர் எனும் அங்கீகாரத்தைப் பெற்றுத்தரும்.  மேலும் இனிவரும் அவரின் படைப்புகளும் ரசிகர்களிடையே  பெரிய எதிர்பார்ப்பினை  உண்டாக்கும். 

 

சோனி மியூசிக் நிறுவனத்தின் இந்தியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளின் தலைவர் ஸ்ரீதர் சுப்பிரமணியன் இப்பாடல் குறித்து பேசுகையில், “இது ஒரு விசேசமான மற்றும் உணர்ச்சிகரமான தருணம் எங்களுக்கு. இந்தக் குடும்பத்துடன் எங்களது உறவு 20 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்கிறது - திரைப்படப் பாடல் இல்லாத ஏ ஆர் ரஹ்மானின் முதல் பாடலான வந்தே மாத்திரம் தொடங்கி, எண்ணிலடங்கா பாடல்கள் உட்பட இப்போது வெளிவந்திருக்கும் இந்த பாடல் வரைக்கும் நாங்கள் இணைந்து இருப்பது மகிழ்ச்சி.

 

அமீன்  ஒரு திறமை  வாய்ந்த கலைஞர் ஆவதற்கான எல்லா அறிகுறிகளும் தென்படுகின்றன. உலகிலேயே மிகச் சிறந்த இசைக் கலைஞரால் பயிற்சி அளிக்கப்பட்ட  அமீன், பிறந்ததில் இருந்தே இசையால் சூழப்பட்டு இருந்தவர்.அமீனின் இன்னிசை அவரது மனதில் இருந்து புறப்படுகிறது.

 

சகோவை நாங்கள் வெவ்வேறு தளங்களில் மார்க்கெட்டிங் செய்ய ஒரு பெரிய பரவலான மார்க்கெட்டிங் பிளான் வைத்துள்ளோம். அவரது இசை லட்சோப லட்சம் மக்களை உலகம் முழுவதும் சென்றடையும். அவருக்கு எல்லோரின் அன்பும் ஆதரவும் கிடைக்கும் என்று நம்புகிறோம்.” என்றார்.

 

தனித்தன்மை வாய்ந்த இப்பாடல், சோனி மியூசிக்கல் உருவாக்கப்பட்ட இசை தொடரான 7UP மேட்ராஸ் கிக் சீசன் 2 வின் கடைசிப் பாடலாக வெளியாகியுள்ளது.

Related News

5171

’சொட்ட சொட்ட நனையுது’ படம் உங்கள் மனதை மாற்றும் - நடிகர் நிஷாந்த் ரூஷோ நம்பிக்கை
Thursday August-07 2025

அட்லர் எண்டர்டெயின்மெண்ட் (Adler Entertainment) தயாரிப்பில், அறிமுக இயக்குநர் நவீத் s ஃபரீத் இயக்கத்தில், நிஷாந்த் ரூஷோ, வர்ஷிணி, ஷாலினி நடிப்பில், இன்றைய தலைமுறையின் கதையில், கலக்கலான காமெடி எண்டர்டெயினராக உருவாகியுள்ள திரைப்படம் ’சொட்ட சொட்ட நனையுது’...

வெஸ்டர்ன் பாடலாக இருந்தாலும் அதில் மெலோடி இருந்தால் தான் ஹிட் ஆகும் - இசையமைப்பாளர் சபேஷ்
Thursday August-07 2025

ஜெர்ரி'ஸ் ஜர்னி இண்டர்நேஷனல் புரொடக்ஷன் ஹவுஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ஜுன் மோசஸ் இயக்கத்தில் அறிமுக நடிகர் வினோத் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'பேய் கதை' படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் சென்னையில் வெளியிடப்பட்டது...

திகில் கதைகளை ஆய்வு செய்யும் தம்பதியின் திகில் பயணமாக உருவாகியுள்ள ‘இன்ஃபிளுன்செர்’!
Monday August-04 2025

இங்கிலாந்து நாட்டு ஆங்கில திரைப்படமாக உருவாகியிருக்கும் ‘இன்ஃபிளுன்செர்’ உண்மையான திகில் எது ? என்பதை விவரிக்கும் பரபரப்பான சஸ்பென்ஸ் திரில்லர் மற்றும் திகில் படமாகும்...

Recent Gallery