நடிகர் சிவகார்த்திகேயன் தனது சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் மூலம் தயாரித்த ‘கனா’ மற்றும் ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு’ ஆகிய படங்களை தொடர்ந்து தயாரிக்கும் மூன்றாவது படத்திற்கு ‘வாழ்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தை ‘அருவி’ பட புகழ் அருண்பிரபு புருஷோத்தமன் இயக்குகிறார்.
தற்போது விறுவிறுப்பான படப்பிடிப்பில் இருக்கும் இப்படத்தின் பஸ்ட் லுக் சமீபத்தில் வெளியிடப்பட்டு பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
ஷெல்லி ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு பிரதீப் குமார் இசையமைக்க, இயக்குநர் அருண்பிரபு புருஷோத்தமன், குட்டி ரேவதி, இசையமைப்பாளர் பிரதீப் குமார் ஆகியோர் பாடல்கள் எழுதியுள்ளனர். ரேமண்ட் டெரிக் க்ராஸ்டா படத்தொகுப்பு செய்ய, ஸ்ரீராமன் கலையை நிர்மாணிக்கிறார். திலீப் சுப்பராயண் சண்டைப்பயிற்சியை கவனிக்க, ஜெய்கர் பி.எச் ஒலிவடிவமைப்பாளராக பணியாற்றுகிறார்.

இப்படத்தை சிவகார்த்திகேயன் நிறுவனத்துடன் மதுரம் பிக்சர்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. கலை அரசு இணை தயாரிப்பாளராகவும், ரா சிபி மாரப்பன் நிர்வாக தயாரிப்பாளராகவும் பணியாற்றுகிறார்கள்.
இப்படத்தின் நடிகர்கள் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்பட உள்ளது.
VR Dinesh and Kalaiyarasan’s recently released socio-political drama Thandakaaranyam is now streaming on Amazon Prime Video, and the film is witnessing a fresh wave of attention and conversations across India...
ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் மற்றும் டர்மெரிக் மீடியா தயாரிப்பில் உருவாகி, பரவலாக பாராட்டப்பட்ட ’அமரன்’ திரைப்படம், கோவாவில் நடைபெறும் 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் (IFFI) இந்தியன் பனோரமா பிரிவில் தொடக்க திரைப்படமாக அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது...
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு அறிமுகமாகி உச்ச நடிகர்களாக உயர்ந்தவர்கள் போல், தானும் உச்சத்தை தொட்டு விடலாம் என்ற நம்பிக்கையோடு வெள்ளித்திரையில் நுழைந்த கவின், ஒரு வெற்றி படத்தை கொடுத்து விட்டு தனது செயலில் அதிரடி காட்ட தொடங்கினார்...