சிவகார்த்திகேயன் தயாரிக்கும் மூன்றாவது படத்தின் தலைப்பு ‘வாழ்’!
Sunday June-30 2019

நடிகர் சிவகார்த்திகேயன் தனது சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் மூலம் தயாரித்த ‘கனா’ மற்றும் ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு’ ஆகிய படங்களை தொடர்ந்து தயாரிக்கும் மூன்றாவது படத்திற்கு ‘வாழ்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தை ‘அருவி’ பட புகழ் அருண்பிரபு புருஷோத்தமன் இயக்குகிறார்.

 

தற்போது விறுவிறுப்பான படப்பிடிப்பில் இருக்கும் இப்படத்தின் பஸ்ட் லுக் சமீபத்தில் வெளியிடப்பட்டு பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

 

ஷெல்லி ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு பிரதீப் குமார் இசையமைக்க, இயக்குநர் அருண்பிரபு புருஷோத்தமன், குட்டி ரேவதி, இசையமைப்பாளர் பிரதீப் குமார் ஆகியோர் பாடல்கள் எழுதியுள்ளனர். ரேமண்ட் டெரிக் க்ராஸ்டா படத்தொகுப்பு செய்ய, ஸ்ரீராமன் கலையை நிர்மாணிக்கிறார். திலீப் சுப்பராயண் சண்டைப்பயிற்சியை கவனிக்க, ஜெய்கர் பி.எச் ஒலிவடிவமைப்பாளராக பணியாற்றுகிறார்.

 

Vaazhl Movie Posters

 

இப்படத்தை சிவகார்த்திகேயன் நிறுவனத்துடன் மதுரம் பிக்சர்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. கலை அரசு இணை தயாரிப்பாளராகவும், ரா சிபி மாரப்பன் நிர்வாக தயாரிப்பாளராகவும் பணியாற்றுகிறார்கள்.

 

இப்படத்தின் நடிகர்கள் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்பட உள்ளது.

Related News

5173

75 நாட்களை கடந்த ‘சிறை’!- படக்குழுவின் வெற்றி கொண்டாட்டம்
Saturday March-14 2026

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் எஸ்...

தனுஷ் சார் முன்பு இயக்குநராக நிற்பது பெருமை - கென் கருணாஸ் நெகிழ்ச்சி
Friday March-13 2026

‘அசுரன்’ மற்றும் ‘விடுதலை 2’ ஆகிய படங்களில் தன் சிறப்பான நடிப்பின் மூலம் கவனம் ஈர்த்த கென் கருணாஸ், நாயகனாக நடித்து இயக்கியிருக்கும் திரைப்படம் ‘யூத்’...

Recent Gallery