Latest News :

மலையாள சினிமாவில் நடிகைகளுக்கு மதிப்பு கிடையாது - பாவனா அதிரடி!
Sunday September-10 2017

மலையாள சினிமாவில் ஆண் ஆதிக்கம் அதிகம் என்று பல நடிகைகள் குற்றம் சாட்டி வரும் நிலையில், நடிகை பாவனாவும் அதே குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார்.

 

கடந்த சில மாதங்களுக்கு முன்பாக கடத்தி கற்பழிக்கப்பட்ட பாவனா, தைரியமாக அச்சம்பவம் குறித்து காவல் துறையில் புகார் தெரிவித்ததோடு, வழக்கு விசாரணைக்கு முழு ஒத்தழைப்பையும் கொடுத்து வருகிறார். இதனால் பாவனாவின் தைரியத்தை மலையாள நடிகைகள் பலர் பாராட்டி வருகிறார்கள்.

 

பாவனா வழக்கில் பிரபல மலையாள நடிகர் திலீப் கைது செய்யப்பட்டிருப்பதோடு, அவரது நெருங்கிய உறவினரான தயாரிப்பாளர் ஒருவரும் விரைவில் கைதாக உள்ளார்.

 

இந்த நிலயில், மீண்டும் மீடியாக்களுக்கு பேட்டி கொடுக்க தொடங்கியுள்ள பாவனா, சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், மலையாள சினிமாவில் நடிகைகளுக்கு சுதந்திரமும் இல்லை, மதிப்பும் இல்லை, என்று கூறியுள்ளார். மலையாள சினிமா முழுக்க முழுக்க ஆண்களை முன்வைத்தே இயங்குவதாகவும், நடிகைகள் எப்போதும் 2 ஆம் நிலைதான், என்றும் கூறியுள்ளார்.

 

ஆணாதிக்கம்  நிறைந்த மலையாள சினிமாவில், திரைப்படம் விற்பனை முதல் அனைத்தும் கதாநாயகர்களை முன் வைத்தே நடக்கிறது. எந்த நடிக்கைக்காகவும் யாரும் படத்தை போட்டிபோட்டு வாங்குவது கிடையாது, சம்பளத்தையும் உயர்த்தி தர மாட்டார்கள், என்று கூறிய பாவனா, பட வாய்ப்புகளுக்காக நடிகைகள் இறங்கிச் செல்லவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். நான் பட வாய்ப்புக்காக யாரிடமும் இதுவரை கெஞ்சியது இல்லை.

 

சினிமா துறையில் பல இடையூறுகள் இருந்தாலும் பெண்கள் தைரியமாக இந்த துறைக்கு வரவேண்டும். சினிமாவில் நடைபெறும் சில அசம்பாவிதங்களை பார்த்து பெண்கள் வீட்டிலேயே முடங்கிவிடக்கூடாது. பெண்களுக்காக மலையாள திரையுலகில் தனி சங்கமே உள்ளதால் அவர்களுக்காக அந்த சங்கம் போராடும்.

 

எனது வாழ்க்கையில் ஏற்பட்ட கசப்பான சில சம்பவங்களில் இருந்து நான் மீண்டு வருவதற்கு எனது ரசிகர்கள் அளித்த மனவலிமையும், எனது குடும்பத்தினர் கொடுத்த மன தைரியமும் பெரிதும் உதவியது. எந்த சோதனை வந்தாலும் அதை எதிர்கொள்ளும் மன தைரியம் எனக்கு இருக்கிறது. எனவே என்னை யாராலும் வீழ்த்த முடியாது, என்றும் கூறியுள்ளார்.

Related News

520

இணையத் தொடர் இயக்க முதலில் தயங்கினேன்! - ‘குட் வொய்ஃப்’ தொடர் பற்றி நடிகை ரேவதி
Friday July-04 2025

ஜியோ ஹாட்ஸ்டார் ஸ்பெஷலாக வெளியாகி இருக்கும் இணையத் தொடர் ‘குட் வொய்ஃப்’...

ரசிகர்களின் அன்பு வியக்க வைத்து விட்டது! - ‘லவ் மேரேஜ்’ வெற்றி விழாவில் நடிகர் விக்ரம் பிரபு உற்சாகம்
Friday July-04 2025

அஸ்யூர் பிலிம்ஸ் மற்றும் ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், சக்தி பிலிம் ஃபேக்டரி வெளியீட்டில், அறிமுக இயக்குநர் சண்முகபிரியன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, சுஷ்மிதா பட், மீனாட்சி தினேஷ், அருள்தாஸ், ரமேஷ் திலக், முருகானந்தம் உள்ளிட்ட பலரது நடிப்பில் வெளியான 'லவ் மேரேஜ்' திரைப்படம்  - ரசிகர்களின் பேராதரவுடன் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...

’டிவைன் மிராக்கல் அண்ட் சீக்ரெட்ஸ் 2’ புத்தகம் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற திரை பிரபலங்கள்
Thursday July-03 2025

தன்வீர் தயானந்த யோகி ஜெயந்தி விழா ஜூலை 2 ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்ட நிலையில், இவ்விழாவை முன்னிட்டு ’தெய்வீக அற்புதங்களும் மற்றும் ரகசியங்களும்’ என்று சொல்லக்கூடிய ‘டிவைன் மிராக்கல் அண்ட் சீக்ரெட்ஸ்’ (Divine Miracles and Secrets - Part 2) என்ற புத்தகத்தின் இரண்டாம் பாகம் வெளியிடப்பட்டது...

Recent Gallery