சினிமாவில் நடிகைகள் பாலியல் பிரச்சினைகளை எதிர்கொள்வதி அதிகரித்து வருதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், தொலைக்காட்சிகளிலும் இதுபோன்ற பாலியல் வன்முறைகள் நடைபெறுவதாக சமீபத்தில் பல குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இந்த நிலையில், பிரபல கன்னட நடிகர் தேஜஸ் கவுடா டிவி நடிகை ஒருவரை கற்பழித்த குற்றத்திற்காக போலீஸார் அவரை கைது செய்துள்ளனர்.
கர்நாடக மாநிலத்தின் சிக்கபல்லபூர் பகுதி காவல் நிலையத்தில் நடிகர் தேஜஸ் கவுடாவுக்கு எதிராக கற்பழிப்பு புகார் அளித்துள்ள டிவி நடிகை, புகாரில், ”நானும் தேஜஸ் கவுடாவும் கல்லூரியில் ஒன்றாக படித்தோம். நண்பர்களாக பின்னர் காதலர்களாக ஆனோம். 2012 ஆம் ஆண்டு தேஜஸ் என்னை ஆசை வார்த்தைக் கூறி கற்பழித்தார். பிறகு திருமணம் செய்துக் கொள்வதாக கூறி பல முறை என்னுடன் உறவு கொண்டார்.
இருவரும் டிவியில் நடிக்க தொடங்கினோம். 2018 ஆம் ஆண்டு நான் கர்ப்பமடைந்தவுடன் அதை கலைத்துவிடும்படி தேஜஸ் கூறினார்.” என்று தெரிவித்துள்ளார்.

தற்போது நடிகர் தேஜஸ் கவுடாவுக்கும் வேறூ ஒரு பெண்ணுக்கும் திருமணம் முடிவாகியுள்ளது. இதை அறிந்த அந்த டிவி நடிகை போலீஸில் புகார் அளித்துள்ளார். போலீஸாரும் நடிகையின் புகாரின் அடிப்படையில் நடிகர் தேஜஸை கைது செய்துள்ளனர்.
VR Dinesh and Kalaiyarasan’s recently released socio-political drama Thandakaaranyam is now streaming on Amazon Prime Video, and the film is witnessing a fresh wave of attention and conversations across India...
ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் மற்றும் டர்மெரிக் மீடியா தயாரிப்பில் உருவாகி, பரவலாக பாராட்டப்பட்ட ’அமரன்’ திரைப்படம், கோவாவில் நடைபெறும் 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் (IFFI) இந்தியன் பனோரமா பிரிவில் தொடக்க திரைப்படமாக அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது...
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு அறிமுகமாகி உச்ச நடிகர்களாக உயர்ந்தவர்கள் போல், தானும் உச்சத்தை தொட்டு விடலாம் என்ற நம்பிக்கையோடு வெள்ளித்திரையில் நுழைந்த கவின், ஒரு வெற்றி படத்தை கொடுத்து விட்டு தனது செயலில் அதிரடி காட்ட தொடங்கினார்...