பிக் பாஸ் மூன்றாவது சீசன் தொடங்கி பரபரப்பாக நடந்து வருகின்றது. இதில் காதல், மோதல், திருமணம் மற்றும் விவாகரத்து ரகசிங்கள் என பல சுவாரஸ்யங்கள் அரங்கேறி வரும் நிலையில், மக்கள் எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கும் எலிமினேஷன் அரங்கேற்றம் இன்று நடைபெற உள்ளது.
போட்டி தொடங்கி முதல் எலிமினேஷன் இது என்பதால் ரசிகர்கள் பெரும் ஆவலோடு காத்திருக்கிறார்கள். பிக் பாஸ் வீட்டை விட்டு இன்று யார் வெளியேறப் போகிறார்கள் என்பதை பிக் பாஸ் கமல்ஹாசன், இன்று அறிவிப்பார்.
எலிமினேஷனில் பாத்திமா பாபு, சேரன், கவின், சாக்ஷி, மீரா, சரவணன், மதுமிதா ஆகியோர் இடம் பெற்றிருந்தாலும், வீட்டில் இருந்து அவுட்டாக இருப்பவர் பாத்திமா பாபு தான் என்று கூறப்படுகிறது.
பிக் பாஸ் போட்டியை பொருத்தவரை, நிகழ்ச்சியில் சர்ச்சையாக பேசி, பரபரப்பை யார் ஏற்படுத்துகிறார்களோ அவர்கள் தான் ஹீரோ. அவர்களுக்கு தான் வெற்றி வாய்ப்பு. அது மட்டும் அல்ல, மக்களிடம் கெட்டப் பெயர் ஏற்பட்டாலும் பரவாயில்லை என்று பிக் பாஸ் வீட்டுக்குள் அடாவடித்தனம் செய்பவர்களுக்கும் ராஜ மரியாதை கிடைக்குமாம். மொத்தத்தில் நிகழ்ச்சி நடத்த கண்டெண்ட் தருபவர்கள் எளிதில் அவுட்டாக மாட்டார்கள்.
அந்த வகையில், தற்போது பிக் பாஸ் வீட்டில் இருப்பவர்களில் எந்த சர்ச்சையிலும் சிக்காமல், அமைதியாக இருப்பவர் பாத்திமா பாபு மட்டுமே. அதனால், பிக் பாஸ் அவரை தான் அவுட்டாக்கி வீட்டை விட்டு வெளியேற்றுவார் என்று கூறப்படுகிறது.
VR Dinesh and Kalaiyarasan’s recently released socio-political drama Thandakaaranyam is now streaming on Amazon Prime Video, and the film is witnessing a fresh wave of attention and conversations across India...
ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் மற்றும் டர்மெரிக் மீடியா தயாரிப்பில் உருவாகி, பரவலாக பாராட்டப்பட்ட ’அமரன்’ திரைப்படம், கோவாவில் நடைபெறும் 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் (IFFI) இந்தியன் பனோரமா பிரிவில் தொடக்க திரைப்படமாக அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது...
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு அறிமுகமாகி உச்ச நடிகர்களாக உயர்ந்தவர்கள் போல், தானும் உச்சத்தை தொட்டு விடலாம் என்ற நம்பிக்கையோடு வெள்ளித்திரையில் நுழைந்த கவின், ஒரு வெற்றி படத்தை கொடுத்து விட்டு தனது செயலில் அதிரடி காட்ட தொடங்கினார்...