தமிழ் சினிமாவில் எதார்த்தமான நடிப்பு மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்திருக்கும் குணச்சித்திர நடிகர்கள் வரிசையில் ராஜ்மோகன்குமார் புதிதாக இணைந்திருக்கிறார்.
கடந்த 2010 ஆம் ஆண்டு சற்குணம் இயக்கத்தில் விமல், ஓவியா நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘களவாணி’ படத்தின் இரண்டாம் பாகமாக ‘களவாணி 2’ வெளியாகியுள்ளது. விமல், ஓவியா மற்றும் இயக்குநர் சற்குணம் என்று அதே கூட்டணி மீண்டும் இணைந்திருப்பதால் பெரும் எதிர்ப்பார்ப்புக்கிடையே வெளியாகியுள்ள இப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.
மேலும், இப்படத்தில் ஓவியாவுக்கு அப்பாவாக அரசியல்வாதி கதாபாத்திரட்தில் நடித்திருக்கும் ராஜ்மோகன்குமார் தனது எதார்த்தமான நடிப்பால் மக்கள் மனதில் பாராட்டை பெற்று வருகிறார். படம் பார்த்தவர்கள் அனைவரும் இவரது நடிப்பை பாராட்ட தவறுவதில்லை.

செல்லத்துரை என்ற கதாபாத்திரத்தில், பஞ்சாயத்து தலைவராக நடித்து அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்திருக்கிறார். கதாபாத்திரத்திற்கு தேவையான நடிப்பை கொடுத்து, அனைவரின் பாராட்டினையும் பெற்றிருக்கிறார்.
ஒவ்வொரு காட்சியிலும் அவரது நடிப்பு அனைவரையும் ரசிக்க வைத்திருக்கிறது. தமிழ் சினிமாவிற்கு நல்லதொரு கதாபாத்திர நடிகர் கிடைத்துவிட்டார்.

VR Dinesh and Kalaiyarasan’s recently released socio-political drama Thandakaaranyam is now streaming on Amazon Prime Video, and the film is witnessing a fresh wave of attention and conversations across India...
ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் மற்றும் டர்மெரிக் மீடியா தயாரிப்பில் உருவாகி, பரவலாக பாராட்டப்பட்ட ’அமரன்’ திரைப்படம், கோவாவில் நடைபெறும் 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் (IFFI) இந்தியன் பனோரமா பிரிவில் தொடக்க திரைப்படமாக அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது...
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு அறிமுகமாகி உச்ச நடிகர்களாக உயர்ந்தவர்கள் போல், தானும் உச்சத்தை தொட்டு விடலாம் என்ற நம்பிக்கையோடு வெள்ளித்திரையில் நுழைந்த கவின், ஒரு வெற்றி படத்தை கொடுத்து விட்டு தனது செயலில் அதிரடி காட்ட தொடங்கினார்...