கடந்த ஆண்டு உறவினர் திருமணத்தில் கலந்துகொள்ள துபாய் சென்ற நடிகை ஸ்ரீதேவி, ஹோட்டல் அறையில் உயிரிழந்தார். அவரது மறைவு இந்திய திரையுலகை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியதோடு, அவரது மரணத்திற்கு பல காரணங்களும் கூறப்பட்டது.
இந்த நிலையில், நடிகை ஸ்ரீதேவியின் மரணம் இயற்கையானது அல்ல, திட்டமிட்ட படுகொலை, என்று கேரள டிஜிபி அதிர்ச்சியளிக்கும் தகவலை வெளியிட்டுள்ளார்.
கேரள போலிஸின் மருத்துவ ஆலோசகராகவும் தடயவியல் மருத்துவ பேராசிரியராக பணிபுரிந்தவர் டாக்டர் உமாடாதன். இவர் கடந்த வாரம் உடல்நலக் குறைவால் உயிரிழந்துள்ளார். இவர் இறப்பதற்கு முன்பாக கேரள டிஜிபி ரிஷிராஜ் சிங்கிடம், ஸ்ரீதேவி மரணம் குறித்து பேசியுள்ளார்.
இது குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய டிஜிபி ரிஷிராஜ் சிங், ”நடிகை ஸ்ரீதேவி மரணம் குறித்து சொன்ன தடயங்களை பார்க்கும் போது படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. ஶ்ரீதேவி அதிகமாக குடித்துவிட்டு குளியல் அறையில் மூழ்கிவிட்டார் என்பது அபத்தம். அப்படியே அதிகமாக குடித்திருந்தாலும் 1 அடி தண்ணீரில் ஒருவர் மூழ்க முடியாது.
அவரது தலையை பிடித்து யாரேனும் அழுத்தினால் தான் மரணிக்க முடியும் என்பது உமாடாதனின் கருத்து.” என்று தெரிவித்துள்ளார்.
கேரள டிஜிபி-யின் இந்த தகவலால் பாலிவுட் சினிமா மட்டு இன்றி ஒட்டு மொத்த இந்திய சினிமாவிலேயே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அட்லர் எண்டர்டெயின்மெண்ட் (Adler Entertainment) தயாரிப்பில், அறிமுக இயக்குநர் நவீத் s ஃபரீத் இயக்கத்தில், நிஷாந்த் ரூஷோ, வர்ஷிணி, ஷாலினி நடிப்பில், இன்றைய தலைமுறையின் கதையில், கலக்கலான காமெடி எண்டர்டெயினராக உருவாகியுள்ள திரைப்படம் ’சொட்ட சொட்ட நனையுது’...
ஜெர்ரி'ஸ் ஜர்னி இண்டர்நேஷனல் புரொடக்ஷன் ஹவுஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ஜுன் மோசஸ் இயக்கத்தில் அறிமுக நடிகர் வினோத் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'பேய் கதை' படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் சென்னையில் வெளியிடப்பட்டது...
இங்கிலாந்து நாட்டு ஆங்கில திரைப்படமாக உருவாகியிருக்கும் ‘இன்ஃபிளுன்செர்’ உண்மையான திகில் எது ? என்பதை விவரிக்கும் பரபரப்பான சஸ்பென்ஸ் திரில்லர் மற்றும் திகில் படமாகும்...