Latest News :

பிக் பாஸ் விதியை மீறிய வனிதா! - கடுப்பில் விஜய் டிவி
Friday July-12 2019

பிக் பாஸ் சீசன் 3 பரபரப்பாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இப்போட்டியின் முதல் எலிமினேஷனில் நடிகை பாத்திமா பாபு வெளியேற்றப்பட்ட நிலையில், இந்த வாரம் வெளியேறப் போவது யார்? என்பதில் பெரும் எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

 

இந்த நிலையில், பிக் பாஸ் போட்டியாளர்களாக பங்கேற்கும் பிரபலங்களுக்கு நிகழ்ச்சி குழுவினர் பல விதிமுறைகளை எழுத்துப் பூர்வமாக போட்டு, அவர்களிடம் கையெழுத்தும் வாங்கிக் கொள்கிறார்கள். அப்படி போடப்படும் விதிமுறைகளில் போட்டியாளர்கள் சம்பளம் குறித்து எந்த இடத்திலும் பேசக் கூடாது, என்பது முக்கியமானதாகும்.

 

ஆனால், இந்த விதிமுறையை பிக் பாஸின் ஹீரோவாக திகழும் வனிதா, தற்போது மீறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருப்பதோடு, விஜய் டிவியை கோபமடைய செய்திருக்கிறது.

 

அதாவது, பிக் பாஸில் போட்டியாளர்களாக பங்கேற்பவர்களுக்கு ஒரு நாளுக்கு இவ்வளவு தொகை சம்பளம் என்று பேசப்படுதாக கூறப்படுகிறது. அதேபோல், ஒரு குறிப்பிட்ட தொகையை சம்பளமாக பேசுகிறார்கள் என்றும் கூறப்படுகிறது. இந்த இரண்டில் எது நிஜம் என்பதில் ரசிகர்களுக்கு குழப்பம் நிலவி வந்த நிலையில், அந்த குழப்பத்தை போக்கும் விதமாக, வனிதா பிக் பாஸின் சம்பள ரகசியத்தை கூறியிருக்கிறார்.

 

தற்போது பிக் பாஸ் வீட்டில் நடக்கும் தொடர் கொலைகளை கண்டுபிடிப்பது போன்ற டாஸ்க்குகளை போட்டியாளர்கள் செய்து வருகிறார்கள்.

 

அதன்படி, கொலையாளி வனிதா தான் என பார்வையாளர்களுக்கு தெரிந்தாலும், வனிதா, முகேனை தவிர வேறு எந்த போட்டியாளர்களுக்கும் தெரியாததால் போலீஸ் குழு திணறுகிறது.

 

இதனால் டென்ஷனான சேரன் ஆவியாகவுள்ள சாக்‌ஷி, ஷெரின், மோகன் வெயிலில் மிகவும் கஷ்டப்படுவதால் இந்த டாஸ்க்கை இப்படியே விட்டுவிட வேண்டும் என பிக்பாஸிடம் கூறுகிறார்.

 

இதற்கிடையில் குறுக்கிடும் வனிதா, ”நாம் பிக்பாஸ் கேம் விளையாட்டிற்கு வந்திருக்கிறோம், குறிப்பிட்ட சம்பளம் பேசி வந்திருக்கோம். அதை மறக்காதீர்கள்” என தெரியாமல் உளறியுள்ளார்.

 

வனிதாவின் இந்த ஓவர் வாயால் பிக் பாஸ் விதி மீறப்பட்டதோடு, ரசிகர்களுக்கு இதுவரை தெரியாத சம்பள ரகசியமும் தெரிந்துவிட்டது.

Related News

5247

’சொட்ட சொட்ட நனையுது’ படம் உங்கள் மனதை மாற்றும் - நடிகர் நிஷாந்த் ரூஷோ நம்பிக்கை
Thursday August-07 2025

அட்லர் எண்டர்டெயின்மெண்ட் (Adler Entertainment) தயாரிப்பில், அறிமுக இயக்குநர் நவீத் s ஃபரீத் இயக்கத்தில், நிஷாந்த் ரூஷோ, வர்ஷிணி, ஷாலினி நடிப்பில், இன்றைய தலைமுறையின் கதையில், கலக்கலான காமெடி எண்டர்டெயினராக உருவாகியுள்ள திரைப்படம் ’சொட்ட சொட்ட நனையுது’...

வெஸ்டர்ன் பாடலாக இருந்தாலும் அதில் மெலோடி இருந்தால் தான் ஹிட் ஆகும் - இசையமைப்பாளர் சபேஷ்
Thursday August-07 2025

ஜெர்ரி'ஸ் ஜர்னி இண்டர்நேஷனல் புரொடக்ஷன் ஹவுஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ஜுன் மோசஸ் இயக்கத்தில் அறிமுக நடிகர் வினோத் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'பேய் கதை' படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் சென்னையில் வெளியிடப்பட்டது...

திகில் கதைகளை ஆய்வு செய்யும் தம்பதியின் திகில் பயணமாக உருவாகியுள்ள ‘இன்ஃபிளுன்செர்’!
Monday August-04 2025

இங்கிலாந்து நாட்டு ஆங்கில திரைப்படமாக உருவாகியிருக்கும் ‘இன்ஃபிளுன்செர்’ உண்மையான திகில் எது ? என்பதை விவரிக்கும் பரபரப்பான சஸ்பென்ஸ் திரில்லர் மற்றும் திகில் படமாகும்...

Recent Gallery