நடிகைகளில் சிலர் சர்ச்சையான வேடங்களில் நடிப்பதோடு, பேட்டிகளிலும் சர்ச்சையாக பேசி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்கள். அதில் முக்கியமானவர் ராதிகா ஆப்தே.
பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கும் இவர், தமிழில் ‘ஆல் இன் ஆல் ஆழகு ராஜா’, ‘தோனி’, ‘வெற்றிசெல்வன்’ போன்ற படங்களில் நடித்திருந்தாலும், ரஜினியின் ‘கபாலி’ படத்தில் நடித்த பிறகே தமிழகர்களிடம் பிரபலமானார்.
தற்போது தமிழ், தெலுங்கு மற்றும் இந்திப் படங்களில் நடித்து வரும் ராதிகா ஆப்தே, நிர்வாணமாக நடிப்பது, படுக்கையறை காட்சிகளில் சர்வசாதாரணமாக நடிப்பது என்று பல துணிச்சலான வேடங்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் தனக்கு ஒவ்வொரு நாளும் ஒரு ஆண் வேண்டும், என்று அவர் கூறியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து பேசிய ராதிகா ஆப்தே, ”ஒருவனுக்கு ஒருத்தி என்பதில் தனக்கு நம்பிக்கையில்லை. தினமும் ஒவ்வொருவருடன் இருப்பது என்பது தினமும் மாறக் கூடிய விஷயம். அது கட்டாயமாக இருக்க வேண்டிய விஷயம் இல்லை. அப்படிப்பட்ட வாய்ப்பு ஒவ்வொரு நாளும் தனக்கு தேவைப்படுகிறது.” என்று தெரிவித்துள்ளார்.

பெனிடிக்ட் டெய்லர் என்ற வெளிநாட்டவரை திருமணம் செய்துக்கொண்டிருக்கும் ராதிகா ஆப்தே, கணவர் இருக்கும் போதே, இப்படி ஒவ்வொரு நாளும் ஒர் ஆண் தனக்கு தேவைப்படுகிறார், என்று கூறியிருப்பது பாலிவுட் சினிமாவில் மட்டும் இன்றி இந்திய சினிமாவையே அதிர வைத்திருக்கிறது.
VR Dinesh and Kalaiyarasan’s recently released socio-political drama Thandakaaranyam is now streaming on Amazon Prime Video, and the film is witnessing a fresh wave of attention and conversations across India...
ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் மற்றும் டர்மெரிக் மீடியா தயாரிப்பில் உருவாகி, பரவலாக பாராட்டப்பட்ட ’அமரன்’ திரைப்படம், கோவாவில் நடைபெறும் 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் (IFFI) இந்தியன் பனோரமா பிரிவில் தொடக்க திரைப்படமாக அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது...
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு அறிமுகமாகி உச்ச நடிகர்களாக உயர்ந்தவர்கள் போல், தானும் உச்சத்தை தொட்டு விடலாம் என்ற நம்பிக்கையோடு வெள்ளித்திரையில் நுழைந்த கவின், ஒரு வெற்றி படத்தை கொடுத்து விட்டு தனது செயலில் அதிரடி காட்ட தொடங்கினார்...