இதுவரை செய்யாததை செய்யப் போகும் ஐஸ்வர்யா ராய்!
Monday July-15 2019

மணிரத்னத்தின் ‘இருவர்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான ஐஸ்வர்யா ராய், தொடர்ந்து ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’, ‘ஜீன்ஸ்’, ‘ராவணன்’, ‘எந்திரன்’ ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். 

 

பாலிவுட்டில் முன்னணி ஹீரோயினாக வலம் வந்தவர், 2007 ஆம் ஆண்டு நடிகர் அபிஷேக் பச்சானை காதல் திருமணம் செய்துக் கொண்டார். திருமணத்திற்குப் பிறகும் தொடர்ந்து நடித்துக் கொண்டிருப்பவர், தற்போது முதல் முறையாக தெலுங்குப் படம் ஒன்றில் ஹீரோயினாக நடிக்க உள்ளார்.

 

தென்னிந்திய மொழிகளில் தமிழ்ப் படத்தில் மட்டுமே நடித்திருக்கும் ஐஸ்வர்யா ராய், முதல் முறையாக சிரஞ்சீவிக்கு ஜோடியாக தெலுங்குப் படம் ஒன்றில் ஹீரோயினாக நடிக்கிறார். ’ராவோயி சண்டமாமா’ என்ற தெலுங்குப் படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியிருந்த ஐஸ்வர்யா ராய், ஹீரோயினாக தெலுங்கு சினிமாவில் களம் இறங்குவது இதுவே முதல் முறை என்பதால், இப்போதே இப்படத்தின் மீது எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

 

Chiranjeevi

 

சிரஞ்சீவி நடிப்பில் உருவாகியுள்ள ‘சைரா நரசிம்மா ரெட்டி’ படத்தின் பணிகள் முடிவடைந்த உடன், இந்த புதிய படத்தின் பணிகள் தொடங்க உள்ளதாம்.

Related News

5262

75 நாட்களை கடந்த ‘சிறை’!- படக்குழுவின் வெற்றி கொண்டாட்டம்
Saturday March-14 2026

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் எஸ்...

தனுஷ் சார் முன்பு இயக்குநராக நிற்பது பெருமை - கென் கருணாஸ் நெகிழ்ச்சி
Friday March-13 2026

‘அசுரன்’ மற்றும் ‘விடுதலை 2’ ஆகிய படங்களில் தன் சிறப்பான நடிப்பின் மூலம் கவனம் ஈர்த்த கென் கருணாஸ், நாயகனாக நடித்து இயக்கியிருக்கும் திரைப்படம் ‘யூத்’...

Recent Gallery