நடிகர் ரஜினிகாந்தின் மகள்களான ஐஸ்வர்யா மற்றும் செளந்தர்யா இருவரும் சினிமாத் துறையில் இயக்குநர்களாக கால் பதித்தாலும் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. மூத்த மகள் ஐஸ்வர்யா இயக்கிய ‘3’ ஓரளவு ஓடினாலும், அவர் அடுத்ததாக இயக்கிய ‘வை ராஜா வை’ அவருக்கு பெரும் தோல்வியை கொடுத்தது. இதையடுத்து படம் இயக்குவதை நிறுத்திய ஐஸ்வர்யா தற்போது தொழிலதிபராகும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
டேபிள் டென்னிஸ் அணி ஒன்றின் உரிமையாளரான ஐஸ்வர்யா, தற்போது ‘சர்வா யோகா’ நிறுவனத்தில் முதலீடு செய்திருக்கிறார்.
சர்வேஷ் ஷஷி மற்றும் நடிகை மலைக்கா அரோரா ஆகியோரல் நிறுவப்பட்டுள்ள இந்த நிறுவனம், நேரடி மற்றும் டிஜிட்டலின் மூலம் யோகாவில்னால் உண்டாகும் நன்மைகளை பார்வையாளர்களுக்கும், வாடிக்கையாளர்களுக்கும் எடுத்துரைக்கின்றனர். இந்த நிறுவனத்திற்கு மலைக்கா அரோரா, சாஹித் கபூர், பாப் நட்சத்திரம் ஜெனிபர் போபஸ் உள்ளிட்ட பல பாலிவுட் நட்சத்திரங்கள் நிதி அளித்துள்ளனர்.

உலக அளவிலான முதலீட்டின் மூலம் ரூ.34.47 கோடி ரூபாய் நிதி திரட்டியிருக்கும் இந்நிறுவனம் அடுத்த மாதத்திற்குள் இந்தியாவில் 100 சர்வா ஸ்டூடியோக்களை தொடும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. வரும் 20200 க்குள் 500 ஸ்டூடியோக்களை ஓயோ நிறுவனத்துடன் இணைந்து அமைக்கவும் திட்டமிட்டுள்ளனர்.
சர்வா மற்றும் திவா யோகா குறித்து கூறிய ஐஸ்வர்யா ஆர்.தனுஷ், “தென்னிந்தியாவில் செயல்பாடுகளை அதிகரிக்க சர்வா நிறுவனம் உதவும். இந்த நவீன வாழ்க்கை முறையில், மன அழுத்தம், பதட்டம், மனச்சோர்வு, தூக்கமின்மை மற்றும் உடல் பருமன் ஆகியவற்றுடன் நாம் தினசரி போராடி வருகின்றோம். மலைக்கா மற்றும் சர்வேஷின், சர்வா மற்றும் திவா யோகா பணிகளை நான் பார்த்து வருகிறேன். ஆரோக்கியத்துடன் தொடர்புடைய எல்லாவற்றிலும் எங்கள் சிந்தனை செயல்முறைகள் எப்படி சரியாக இணைகின்றன என்பது ஆச்சரியமாக இருக்கிறது. அவர்கள் இருவருடனும் பணியாற்றுவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன், இந்த கூட்டணியின் மூலம் தென்னிந்தியாவில் சர்வா மற்றும் திவா யோகா அதிகரிக்கும் என்று நம்புகிறேன். நினைவாற்றல் மற்றும் முழுமையான ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தை உலகத்திற்கு நினைவூட்ட வேண்டும், என்பது சர்வாவின் குறிக்கோள், நான் இதில் முதலீடு செய்ததற்கான காரணமும் இதுவே.” என்று கூறினார்.

இப்படி தொழில் ரீதியாக பல்வேறு நிறுவனங்களில் மூதலீட்டாளராக உருவெடுத்து வரும் ஐஸ்வர்யா, சினிமாவுக்கு குட் பை சொல்லிவிட்டார் என்றே கூறப்படுகிறது.
VR Dinesh and Kalaiyarasan’s recently released socio-political drama Thandakaaranyam is now streaming on Amazon Prime Video, and the film is witnessing a fresh wave of attention and conversations across India...
ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் மற்றும் டர்மெரிக் மீடியா தயாரிப்பில் உருவாகி, பரவலாக பாராட்டப்பட்ட ’அமரன்’ திரைப்படம், கோவாவில் நடைபெறும் 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் (IFFI) இந்தியன் பனோரமா பிரிவில் தொடக்க திரைப்படமாக அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது...
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு அறிமுகமாகி உச்ச நடிகர்களாக உயர்ந்தவர்கள் போல், தானும் உச்சத்தை தொட்டு விடலாம் என்ற நம்பிக்கையோடு வெள்ளித்திரையில் நுழைந்த கவின், ஒரு வெற்றி படத்தை கொடுத்து விட்டு தனது செயலில் அதிரடி காட்ட தொடங்கினார்...