இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசைத் துறைக்கு வந்து 25 ஆண்டுகள் ஆகிறது. இதையொட்டி ஏ.ஆர்.ரஹமானை கெளரவிக்கும் விதத்தில் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு வெள்ளி விழா கொண்டாட ஆந்திர அரசு முடிவு செய்துள்ளது.
ஆந்திர அரசு சார்பில், முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில், காக்கிநாடாவில் நடைபெற உள்ள இந்த வெள்ளி விழாவில், ரஹ்மானின் 3 மணி நேர இசைக் கச்சேரியும் நடத்தப்பட உள்ளது. இதில், ரஹ்மானுடன் 50 இசைக் கலைஞர்களும் பங்கேற்க உள்ளனர். இந்த 50 பேரையும் திறன் அடிப்படையில் விழா குழுவினர் தேர்வு செய்ய உள்ளனர். இதற்காக வரும் செப்டம்பர் 15 அல்லது 20 ஆம் தேதியில் இருந்து ஆன்லைனில் போட்டிகள் நடைபெற உள்ளது.
வரும் அக்டோபர் அல்லது டிசம்ப மாதத்தி ரஹ்மானின் வெள்ளி விழா ஆண்டு விழாவை நடத்த திட்டமிட்டுள்ள ஆந்திர அரசு, இந்த நிகழ்ச்சியின் மேடைக்கு மட்டும் ரூ.2 கோடி செலவு செய்ய உள்ளதாம்.
‘தலைவர் தம்பி தலைமையில்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து கே...
’செல்லமே’, ‘ஆனந்த தாண்டவம்’ ஆகிய வெற்றிப் படங்களை இயக்கிய ஏ...
வி.ஒய்.ஓ.எம் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் சதீஷ் மற்றும் விஜயா சதீஷ் தயாரிப்பில், டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘மனிதன் தெய்வமாகலாம்’...