பிக் பாஸ் வீட்டுக்குள் மீண்டும் போலீஸ்! - எதற்காக தெரியுமா?
Thursday July-25 2019

பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி கடந்த மாதம் தொடங்கி ஒளிபரப்பாகி வருகிறது. இதற்காக பிக் பாஸ் வீடு சென்னையை அடுத்துள்ள பூந்தமல்லி அருகே உள்ள ஈவிபி பிலிம் சிட்டியில் செட் போடப்பட்டு படமாக்கப்பட்டு வருகிறது.

 

இதற்கிடையே, போட்டியாளர்களாக பிக் பாஸ் வீட்டுக்குள் இருக்கும் மீரா மிதுன் மற்றும் வனிதா ஆகியோர் மீது போலீஸ் புகார் அளித்ததை தொடர்ந்து, பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தியது. குழந்தை கடத்தல் தொடர்பாக வனிதாவிடமும், மிஸ் தமிழ்நாடு நிகழ்ச்சி நடத்துவதாக கூறி மோசடியில் ஈடுபட்டது தொடர்பாக மீரா மிதுனிடமும் போலீசார் விசாரணை நடத்தினார்கள். பிறகு, போட்டியில் இருந்து இருவரும் வெளியே வந்ததும் தீவிர விசாரணை நடத்துவதாக கூறி பிக் பாஸ் வீட்டை விட்டு போலீசார் சென்று விட்டார்கள்.

 

இந்த நிலையில், இன்று மீண்டும் பிக் பாஸ் வீட்டில் போலீஸ் நுழைந்துள்ளது. காரணம், மீரா மிதுன் தான். மிஸ் தமிழ்நாடு போட்டி நடத்துவதாக கூறி மீரா மிதுன், பல பெண்களிடம் பணம் மோசடி செய்திருப்பதாக புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

 

இது தொடர்பாக விசாரிக்க, இன்று ஈவிபி பிலிம் சிட்டியில் உள்ள பிக் பாஸ் வீட்டில், எழும்பூர் காவல்நிலைய போலீஸ் அதிகாரிகள் நுழைந்தனர். அவர்கள் மீரா மிதுனிடம் தற்போது விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

 

Meera Mithun

 

விசாரணைக்குப் பிறகு மீரா மிதுன் கைது செய்யப்பட கூடும் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Related News

5321

75 நாட்களை கடந்த ‘சிறை’!- படக்குழுவின் வெற்றி கொண்டாட்டம்
Saturday March-14 2026

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் எஸ்...

தனுஷ் சார் முன்பு இயக்குநராக நிற்பது பெருமை - கென் கருணாஸ் நெகிழ்ச்சி
Friday March-13 2026

‘அசுரன்’ மற்றும் ‘விடுதலை 2’ ஆகிய படங்களில் தன் சிறப்பான நடிப்பின் மூலம் கவனம் ஈர்த்த கென் கருணாஸ், நாயகனாக நடித்து இயக்கியிருக்கும் திரைப்படம் ‘யூத்’...

Recent Gallery