ஹீரோயின் சப்ஜட் என்றாலும், சமூகத்திற்கு தேவையான கதைக்களங்களை தேர்வு செய்து நடித்து வரும் ஜோதிகாவின் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஜாக்பாட்’. கல்யாண் இயக்கியிருக்கும் இப்படத்தில் ரேவதியும் முக்கிய வேடம் ஒன்றில் நடித்திருக்கிறார்.
நடிகர் சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படம் வரும் ஆகஸ்ட் 2 ஆம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தை சக்தி பிலிம் பேக்டரி நிறுவனம் சார்பில் சக்திவேல் வெளியிடுகிறார்.
விஷால் சந்திரசேகர் இசையமைத்திருக்கும் இப்படத்தில் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகர் சூர்யா, ஜோதிகா உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் கலந்துக் கொண்டார்கள்.
நிகழ்ச்சியில் பேசிய சூர்யா, “என்னோட ஜோ தான் என்னோட ஜாக்பாட். 100 சதவிகிதம் 200 சதவிகிதம் எந்த காம்ப்ரமேஸும் இல்லாமல் சரியாச் செய்ற அம்மா ஜோதிகா. அவர் தேர்ந்தெடுக்கிற படங்கள் எல்லாவற்றையும் மிகவும் யோசித்து யோசித்து தான் செய்வார். தமிழ்நாட்டுப் பெண்கள் ஒவ்வொருவரும் அவர்களைப் பற்றி, சமூகத்தைப் பற்றி மிகச் சரியான மதிப்பீட்டை வைத்திருப்பார்கள். ஜோதிகாவுக்கு இந்தப்படம் சரியான படம். சில ஆக்ஷன் காட்சிகளைப் பார்த்து எப்படி இதையெல்லாம் செய்திருப்பார் என்று ஆச்சர்யப்பட்டேன். ஆறுமாதம் சிலம்பம் கத்துக்கிட்டார். மீண்டும் நான் ஜோதிகாவிடம் இருந்து நிறைய கற்றுக்கொண்டேன். இன்றைய ஹீரோ விஷால் சந்திரசேகருக்கும் என் வாழ்த்துகள்.” என்று ஜோதிகாவை பேச்சால் உருக வைத்தார்.
ஜோதிகா பேசுகையில், “முதல் நன்றி சிவக்குமார் அப்பாவிற்கு. 2D எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனத்தில் இரண்டு வருசத்துக்குப் பிறகு நடிக்கிறேன். இது எனக்கு ரொம்ப புதுசான படம். இப்படி ஒரு கதையில் நான் நடித்ததே இல்லை. ரேவதி மேடத்திற்கு ஈக்குவலான ரோல். அதற்கு கல்யாண் சாருக்கு நன்றி. ஹீரோஸ் என்னன்ன பண்றாங்க என்பதைப் பார்த்து எல்லாவற்றையும் எங்களைப் பண்ணச் சொன்னார். பாடல்கள் ரொம்ப நல்லாருந்தது. பெண்களுக்குப் பவர் வேண்டும். இந்தப்பாடல்களில் அது இருக்கிறது. எல்லா ஷாட்ஸ்களையும் பிரம்மாண்டமாக எடுத்திருக்கிறார்கள். ஒரே நாளில் ஒரு பாடலை எடுத்து முடித்தார் பிருந்தா மாஸ்டர். இந்தப்படத்தில் எனக்கு என் ஹஸ்பெண்ட் சண்டைக்காட்சிகளுக்கான கிட்ஸ் நிறைய வாங்கிக் கொடுத்தார். அவர் தான் என்னோட எல்லா முயற்சிகளுக்கும் கை கொடுப்பவர். அவர் இல்லை என்றால் நான் இல்லை. என்னோட ஜாக்பாட் சூர்யா தான். பெரும்பாலும் நடிகைகள் நடித்தப்படங்களை அந்தந்தப் படங்களின் ஹீரோக்களோடு தான் ஒப்பிட்டுப் பேசுவார்கள். ஆனால் நான் பெரிய பெரிய ஹீரோயின்களோடு நடிக்கும் வாய்ப்பினைப் பெற்றிருக்கிறேன். அதைப் பெருமையோடு சொல்லிக்கொள்கிறேன்.” என்றார்.
இயக்குநர் கல்யான் பேசுகையில், “எனக்கு பெரிய ஜாக்பாட் என்னன்னா 2D எண்டெர்டெயின்மெண்ட் தான். நான் ராஜா சாரிடம் போய் மூன்று சீன் தான் சொன்னேன். உடனே செக் கொடுத்துட்டார். பிறகு ஜோதிகா மேடத்திடம் கதையைச் சொன்னேன். அவர் உடனே சூட்டிங் போகலாம் என்றார். ஸ்பாட்டில் சூர்யா தான் ஜோதிகாவுக்குள் வந்துவிட்டாரோ என்று நினைக்கும் அளவிற்கு பிரமாதமாகப் பண்ணி இருக்கிறார். படத்தில் ஜோதிகா பாதி சூர்யாவாகவும் பாதி ஜோதிகாவாகவும் தெரிவார். விஷால் சந்திரசேகர் ஒரு நல்ல இசை அமைப்பாளர் பவர்புல்லான இசை அமைப்பாளர் எங்களுக்கு கிடைத்திருக்கிறார்.” என்றார்.

தயாரிப்பாளர் ராஜ்சேகர் கற்பூரசுந்தரபாண்டியன் பேசுகையில், “எனக்குச் சூர்யா நண்பராக கிடைத்தது ஜாக்பாட். இப்படி ஒரு ஸ்கிரிப்ட்டைக் கேட்டு சிரித்த அளவுக்கு வேறு எந்தக்கதையைக் கேட்டும் நாங்கள் சிரித்ததில்லை. 2D எண்டெர்டெயின்மெண்ட் பெயரில் எண்டெர்டெயின்மெண்ட் இருக்கு. எங்கள் கதைகளில் 70% கமர்சியல் இருக்கும் 30% மெசேஜ் இருக்கும். கல்யாண் வெறித்தனமாக வேலை செய்பவர். அவரது டீமும் அப்படித்தான்.” என்றார்.
தயாரிப்பாளர் சக்திவேல் பேசுகையில், “ஒரு படத்தின் வெற்றி என்பது பர்ஸ்டே பர்ஸ்ட் சோவில் தான் தெரியும். ஆனால் எங்களுக்கு முன்னாடியே தெரிந்து விட்டது. ஏன் என்றால் தமிழ்நாட்டில் பல திரையரங்க உரிமையாளர்கள் போன் பண்ணி கேட்கிறார்கள். இந்தப்படம் அவ்ளோ நல்லாருக்கு. ஜோதிகா மேடம் நடித்ததிலே இந்தப்படம் தான் எனக்கு ரொம்ப பிடித்தது. 2D எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் படங்களை வெளியீடுவதை பெருமையாகச் சொல்வேன். சூர்யா அண்ணன் என்மேல் வைத்துள்ள நம்பிக்கைக்காக வேகமாக ஓடுவோம்.” என்றார்.
நிகழ்ச்சியில் நடிகர் மன்சூரலிகான், இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர், நடிகைகள் சச்சு, தேவதர்ஷினி, பாடகர்கள் பிருந்தா, ஆண்டனி தாஸ், பாடலாசிரியர் அருண்ராஜ் காமராஜா உள்ளிட்ட பலர் பேசினார்கள்.
VR Dinesh and Kalaiyarasan’s recently released socio-political drama Thandakaaranyam is now streaming on Amazon Prime Video, and the film is witnessing a fresh wave of attention and conversations across India...
ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் மற்றும் டர்மெரிக் மீடியா தயாரிப்பில் உருவாகி, பரவலாக பாராட்டப்பட்ட ’அமரன்’ திரைப்படம், கோவாவில் நடைபெறும் 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் (IFFI) இந்தியன் பனோரமா பிரிவில் தொடக்க திரைப்படமாக அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது...
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு அறிமுகமாகி உச்ச நடிகர்களாக உயர்ந்தவர்கள் போல், தானும் உச்சத்தை தொட்டு விடலாம் என்ற நம்பிக்கையோடு வெள்ளித்திரையில் நுழைந்த கவின், ஒரு வெற்றி படத்தை கொடுத்து விட்டு தனது செயலில் அதிரடி காட்ட தொடங்கினார்...