சிம்புவை வைத்து படம் எடுப்பதும், அந்த படத்திற்கு பிறகு சம்மந்தப்பட்ட தயாரிப்பாளர் திரையுலகில் இருப்பதும் அதிசியமான ஒன்றாகவே இருந்த நிலையில், ‘செக்கச் சிவந்த வானம்’ படத்திற்குப் பிறகு சிம்புவின் நடவடிக்கைகளில் மாற்றம் தெரிந்ததால், அவரும் பிற நடிகர்களை போல தான், இனி அவரை வைத்து எந்தவித பயமும் இல்லாமல், படம் தயாரிக்கலாம் என்று நினைத்த தயார்பாளர்களின் எண்ணத்தில், சிம்பு பெரிய கல்லை போட்டிருக்கிறார்.
கெளதம் கார்த்திக்குடன் இணைந்து சிம்பு நடித்து வரும் படம் கன்னடத்தில் வெற்றிப் பெற்ற ‘முஃப்தி’ படத்தின் ரீமேக்காகும். இந்த படத்தை கன்னடத்தில் இயக்கிய நார்தனே தான் தமிழிலும் இயக்குகிறார்.
ஸ்டுடியோ க்ரீன் ஞானவேல்ராஜா தயாரிக்கும் இந்த படத்தில் சிம்பு நிழல் உலக தாதாவாக நடிக்க, கெளதம் கார்த்திக் போலீஸாக நடிக்கிறார்.
கடந்த ஜூன் 15 ஆம் தேதி தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு, மழை, புயல், கடும் வெயில் என அனைத்து இயற்கை சீற்றங்களை கடந்தாலும், எந்தவித பாதிப்பும் இல்லாமல் படப்பிடிப்பு தொடர்ந்தது.
ஆனால், சிம்புவின் அடாவடித்தனத்தால் தற்போது படப்பிடிப்பு பாதிக்கப்பட்டிருப்பதோடு, படம் முடியுமா? அல்லது அப்படியே டிராப்பாகிவிடுமா? என்ற அச்சத்தில் தயாரிப்பாளர் உள்ளதாக கூறப்படுகிறது.
படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே, யாரிடமும் சொல்லாமல் எஸ்கேப் ஆன சிம்பு, பிறகு படப்பிடிப்பு குறித்து இதுவரை எதுவும் பேசவில்லையாம். ஏற்கனவே தனது நண்பர்களுடன் படப்பிடிப்பு வந்தவர்கள், அவர்களை தயாரிப்பாளர் செலவிலேயே நட்சத்திர ஓட்டலில் தங்க வைத்து அடாவடி செய்தவர், தற்போது படப்பிடிப்புக்கு டிமிக்கி கொடுத்து வருகிறாராம்.
படத்தை முடித்தால் போதும், என்ற எண்ணத்தில் சிம்புக்கு எந்தவித அழுத்தமும் கொடுக்காமல் தயாரிப்பாளர் அமைதியாக இருந்தாலும், சிம்புவின் இந்த அடாவடிதனத்தால் ரொம்பவே அப்செட்டாகி இருக்கிறாராம்.
VR Dinesh and Kalaiyarasan’s recently released socio-political drama Thandakaaranyam is now streaming on Amazon Prime Video, and the film is witnessing a fresh wave of attention and conversations across India...
ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் மற்றும் டர்மெரிக் மீடியா தயாரிப்பில் உருவாகி, பரவலாக பாராட்டப்பட்ட ’அமரன்’ திரைப்படம், கோவாவில் நடைபெறும் 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் (IFFI) இந்தியன் பனோரமா பிரிவில் தொடக்க திரைப்படமாக அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது...
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு அறிமுகமாகி உச்ச நடிகர்களாக உயர்ந்தவர்கள் போல், தானும் உச்சத்தை தொட்டு விடலாம் என்ற நம்பிக்கையோடு வெள்ளித்திரையில் நுழைந்த கவின், ஒரு வெற்றி படத்தை கொடுத்து விட்டு தனது செயலில் அதிரடி காட்ட தொடங்கினார்...