‘கடாரம் கொண்டான்’ படத்தின் வெற்றியால் உற்சாகத்தில் இருக்கும் விக்ரம், அதே உற்சாகத்தோடு தனது அடுத்தப் படத்தின் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார்.
’டிமாண்டி காலணி’, ‘இமைக்கா நொடிகள்’ ஆகிய வெற்றிப் படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து தான் விக்ரமின் அடுத்தப் படத்தை இயக்குகிறார். இன்னும் தலைப்பு வைக்கப்படாத இப்படத்தை ‘விக்ரம் 58’ என்று அழைக்கின்றனர்.
ஆக்ஷன், த்ரில்லர் படமாக உருவாகும் இப்படத்தை செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ லலித குமார் மற்றும் வியாகாம் 185 ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இணைந்து பிரம்மாண்டமாக தயாரிக்கிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்தில் ஹீரோயினாக பிரியா பவானி சங்கர் ஒப்பந்தமாகியுள்ளார். மற்ற நடிகர், நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், இப்படத்தில் விக்ரம் 25 கெட்டப்புகளில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை விக்ரம் அதிகபட்சமாக ‘ராஜபாட்டை’ படத்தில் 7 கெட்டப்புகளில் நடித்திருந்தார். மேலும், ஷங்கரின் ‘ஐ’ படத்தில் யாருமே நடிக்க முடியாது கெட்டப்பிலும் நடித்து அசத்தினார். கெட்டப்புக்காக எந்தவிதமான ரிஸ்க் எடுக்கவும் தயாராக இருக்கும் விக்ரம், 25 கெட்டப்புகளில் நடிக்கும் புது ரிஸ்க்கை எடுக்க இருப்பது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.
ஒவ்வொரு கெட்டப்புகளுக்கும் பெரிய அளவில் வேறுபாட்டை காட்டும் விதத்தில் இந்த 25 கெட்டப்புகளும் இருக்குமாம். இதனால், இது விக்ரமுக்கு பெரிய ரிஸ்க்கான காரியமாகவும் இருக்கும், என்றும் கூறப்படுகிறது.
VR Dinesh and Kalaiyarasan’s recently released socio-political drama Thandakaaranyam is now streaming on Amazon Prime Video, and the film is witnessing a fresh wave of attention and conversations across India...
ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் மற்றும் டர்மெரிக் மீடியா தயாரிப்பில் உருவாகி, பரவலாக பாராட்டப்பட்ட ’அமரன்’ திரைப்படம், கோவாவில் நடைபெறும் 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் (IFFI) இந்தியன் பனோரமா பிரிவில் தொடக்க திரைப்படமாக அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது...
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு அறிமுகமாகி உச்ச நடிகர்களாக உயர்ந்தவர்கள் போல், தானும் உச்சத்தை தொட்டு விடலாம் என்ற நம்பிக்கையோடு வெள்ளித்திரையில் நுழைந்த கவின், ஒரு வெற்றி படத்தை கொடுத்து விட்டு தனது செயலில் அதிரடி காட்ட தொடங்கினார்...