உயிரிழந்த அரியலூர் மாணவி அனிதாவுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி சமீபத்தில் சென்னை வடபழனியில் நடைபெற்றது. திரைப்பட உதவி இயக்குநர்கள் ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்ச்சியில் ஜாதி தொடர்பாக இயக்குநர்கள் பா.ரஞ்சித் மற்றும் அமீர் இடையே கருத்து மோதல் ஏற்பட்டது. இதையடுத்து, இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் விவாதிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், டிவிட்டரில் பா.ரஞ்சித்துக்கு எஸ்.வி.சேகர் கூறுகையில், தன்னை தமிழன் என்று சொல்லாமல் தலித் என்று சொல்லும் ரஞ்சித். தன் ஜாதியைப் பெருமையாக சொல்லும் ரஞ்சித்துக்கு வாழ்த்துக்களும் வணக்கங்களும், என்று பதிவிட்டிருந்தார்.
இதற்கு பதில் அளித்த ரஞ்சித், தலித் என்பது ஜாதியல்ல, ஆரியம்-ஜாதியம் ஒழிக்கும் விடுதலைக் கருத்தியல் என்று தெரிவித்திருந்தார்.
இதையடுத்து, ரஞ்சித்துக்கு மேலும் பல ட்விட்கள் மூலம் பதில் அளித்த எஸ்.வி.சேகர், தம்பி, தலித் என்று சொன்னது நீங்கள் தான். ஆரியம் - ஜாதியம் ஒழிக்கும் விடுதலை கருத்தியல், நடைமூறை சாத்தியமில்லா கருத்தியல். காலம் உணர்த்தும். வெற்றி வேகம் தங்களின் பதில். வயதும் அனுபவமும் கூடக்கூட தெளிவு பெறுவீர்கள். என் நண்பர் தங்களின் நாயகன் புரிய வைப்பார், என்று தெரிவித்துள்ளார்.
ஜியோ ஹாட்ஸ்டார் ஸ்பெஷலாக வெளியாகி இருக்கும் இணையத் தொடர் ‘குட் வொய்ஃப்’...
அஸ்யூர் பிலிம்ஸ் மற்றும் ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், சக்தி பிலிம் ஃபேக்டரி வெளியீட்டில், அறிமுக இயக்குநர் சண்முகபிரியன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, சுஷ்மிதா பட், மீனாட்சி தினேஷ், அருள்தாஸ், ரமேஷ் திலக், முருகானந்தம் உள்ளிட்ட பலரது நடிப்பில் வெளியான 'லவ் மேரேஜ்' திரைப்படம் - ரசிகர்களின் பேராதரவுடன் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
தன்வீர் தயானந்த யோகி ஜெயந்தி விழா ஜூலை 2 ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்ட நிலையில், இவ்விழாவை முன்னிட்டு ’தெய்வீக அற்புதங்களும் மற்றும் ரகசியங்களும்’ என்று சொல்லக்கூடிய ‘டிவைன் மிராக்கல் அண்ட் சீக்ரெட்ஸ்’ (Divine Miracles and Secrets - Part 2) என்ற புத்தகத்தின் இரண்டாம் பாகம் வெளியிடப்பட்டது...