தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவரான அதர்வா, திரைப்படம் தயாரித்து கையை சுட்டுக்கொண்டதோடு, பல பிரச்சினைகளையும் எதிர்கொண்டதால், இனி தயாரிப்பு பக்கமே தலைக்காட்ட மாட்டேன், என்பதில் உறுதியாக இருக்கிறார். இருந்தாலும், அவர் நடிக்கும் படங்களும் அவ்வபோது சிக்கல்களில் சிக்கி சின்னாபின்னாமாகிறது.
அந்த வகையில், அதர்வாவின் நடிப்பில் வெளியான ‘100’ படம் ரிலீஸுக்கு முன்பு பல பிரச்சினைகளை எதிர்க்கொண்டு பிறகு ரிலீஸான நிலையில், தற்போது மீண்டும் அப்படத்திற்கு எதிராக நீதிமன்ற வழக்கு தொடரப்பட்டு, அதில் தடையும் விதிக்கப்பட்டுள்ளது.
சாம் ஆண்டன் இயக்கத்தில் அதர்வா, ஹன்சிகா நடிப்பில் கடந்த மே மாதம் வெளியான ‘100’ படத்தில் அதர்வா போலீஸ் அதிகாரியாகவும், போலீஸ் கண்ட்ரோல் ரூமை மையமாக வைத்தும் இப்படத்தின் கதை அமைக்கப்பட்டிருந்தது. படம் வெளியாக ஓரளவு வெற்றி பெற்றது.

இந்த நிலையில், இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஆரா சினிமாஸ் ஏற்கனவே இருந்த கடன் பிரச்சினை தொடர்பாக, எம்.எம்.எண்டர்டெயின்மெண்ட் என்ற நிறுவனம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்நிறுவனம் ஏற்கனவே ஆரா சினிமாஸ் நிறுவனத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்த போது, படம் ரிலீஸான பிறகு கடனை திருப்பித்தருவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆனால், அந்த வாக்குறுதியை இன்றுவரை ஆரா சினிமாஸ் நிறுவனம் நிறைவேற்றவில்லை என்று தெரிகிறது.
இதை தொடர்ந்து மீண்டும் 100 படத்திற்கு எதிராக எம்.எம்.எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீபதி, படத்தை தொலைக்காட்சிகளில் ஒளிபரப்ப தடை விதித்துள்ளார்.
VR Dinesh and Kalaiyarasan’s recently released socio-political drama Thandakaaranyam is now streaming on Amazon Prime Video, and the film is witnessing a fresh wave of attention and conversations across India...
ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் மற்றும் டர்மெரிக் மீடியா தயாரிப்பில் உருவாகி, பரவலாக பாராட்டப்பட்ட ’அமரன்’ திரைப்படம், கோவாவில் நடைபெறும் 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் (IFFI) இந்தியன் பனோரமா பிரிவில் தொடக்க திரைப்படமாக அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது...
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு அறிமுகமாகி உச்ச நடிகர்களாக உயர்ந்தவர்கள் போல், தானும் உச்சத்தை தொட்டு விடலாம் என்ற நம்பிக்கையோடு வெள்ளித்திரையில் நுழைந்த கவின், ஒரு வெற்றி படத்தை கொடுத்து விட்டு தனது செயலில் அதிரடி காட்ட தொடங்கினார்...