தரமான படங்களை தொடர்ந்து தயாரித்து வழங்கி வரும் ஜே எஸ் கே பிலிம் கார்பொரேஷன் நிறுவனம், நேற்று தமிழக அரசாங்கம் அறிவித்து இருந்த மாநில விருதுகள் 10 விருதுகளை பெற்று இருக்கிறது.
இது குறித்து பேசிய தயாரிப்பாளர் சதிஷ்குமார், “என்னுடைய திரை உலக பயணத்தில் இன்றைய நாள் மறக்க முடியாத நாளாகும். பல்வேறு தேசிய, சர்வதேச விருதுகள் என்னுடைய படங்கள் மூலம் பெற்று இருந்தாலும்,நம் தாய் தமிழ் நாட்டின் விருதுகள் கிடைக்க பெற்றதில் பேரானந்தம். நிறுவனம் துவங்கிய சில வருடங்களில் விருதுகள் பல வென்றது எங்களது நிறுவனத்துக்கும் எனக்கும் பொறுப்பு உணர்ச்சியை அதிகம் கூட்டுகிறது என்கிறது என்று தான் சொல்லுவேன். நான் சார்ந்து இருக்கும் திரை உலகிகின் சார்பில் தமிழக அரசுக்கும், தமிழக முதல்வர் மாண்பிமிகு எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கும் உள்ளத்தின் ஆழத்தில் இருந்து நன்றி சொல்கிறேன். இதை போலவே இன்று விருதுகள் கிடைக்க பெற்ற ஏனைய திரை உலகினருக்கும் என் வாழ்த்துக்கள். சவால்கள் நிறைந்த இந்த திரை வாழ்வில் விருதுகளும், பாராட்டும், அங்கீகாரமும் தான் ஆறுதல் என்பதை நானும் அறிவேன். இந்த விருது வழங்கும் நடை முறை தமிழக அரசாங்கத்துக்கும் திரை உலகினருக்கும் மேலும் நல்லுணர்வை ஊட்டும் என நம்புகிறேன்.” என்றார்.
உலக அளவில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைத்து அதரப்பினரையும் கவர்ந்து, இன்று வரை அனைத்து தரப்பின் மக்களின் பேவரைட் ஹாலிவுட் திரைப்படங்களில் ஒன்றாக இருக்கும் ‘ஜுராசிக் வேர்ல்ட் ட்ரையாலாஜி’-யின் வெற்றிக்குப் பிறகு புதிய கதையுடன் மீண்டும் உருவாகியுள்ளது...
மெட்ராஸ் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் & இயக்குநர் கார்த்திகேயன் மணி இயக்கத்தில் சத்யராஜ், காளி வெங்கட், ஷெல்லி, ரோஷினி ஹரிப்பிரியன் , விஷ்வா ஜார்ஜ் மரியான், அர்ச்சனா சந்தூக் , சுனில் சுகதா சாம்ஸ் ,கீதா கைலாசம் மற்றும் பலர் நடித்திருந்த மெட்ராஸ் மேட்னி எனும் திரைப்படம் ஜூன் மாதம் 6 ஆம் தேதியன்று வெளியானது...
தெலுங்கு திரையுலகின் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் திரைப்படமான ‘பெத்தராயுடு’ வெளியாகி 30 ஆனடுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் விதமாக நடிகர் ரஜினிகாந்த் மற்றும் நடிகர் டாக்டர்...