அஜித் நடிப்பில் உருவாகியுள்ள ‘நேர்கொண்ட பார்வை’ படம் வரும் ஆகஸ்ட் 8 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. இந்தியில் வெற்றி பெற்ற பிங்க் படத்தின் ரீமேக்கான இப்படத்தை எச்.வினோத் இயக்கியிருக்கிறார். போனி கபூர் தயாரித்திருக்கிறார்.
இப்படத்தின் ரிலீஸ் தேதியான ஆகஸ்ட் 8 ஆம் தேதி சென்னையில் பல திரையரங்குகளில் சிறப்பு காட்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சில திரையரங்குகளில் நள்ளிரவு 1 மணி காட்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், இரண்டு நாட்களுக்கு முன்பாகவே சிங்கப்பூரில் ‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் சிறப்பு காட்சி திரையிடப்படுகிறது. அதாவது, இந்திய நேரப்படி நாளை (ஆகஸ்ட் 6) மாலை 5 மணிக்கு சிங்கப்பூரில் நேர்கொண்ட பார்வை படத்தின் சிறப்பு காட்சி திரையிடப்படுகிறதாம். இதன் மூலம் நேர்கொண்ட பார்வை படத்தின் முதல் காட்சி சிங்கப்பூரில் திரையிடப்படுகிறது.
VR Dinesh and Kalaiyarasan’s recently released socio-political drama Thandakaaranyam is now streaming on Amazon Prime Video, and the film is witnessing a fresh wave of attention and conversations across India...
ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் மற்றும் டர்மெரிக் மீடியா தயாரிப்பில் உருவாகி, பரவலாக பாராட்டப்பட்ட ’அமரன்’ திரைப்படம், கோவாவில் நடைபெறும் 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் (IFFI) இந்தியன் பனோரமா பிரிவில் தொடக்க திரைப்படமாக அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது...
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு அறிமுகமாகி உச்ச நடிகர்களாக உயர்ந்தவர்கள் போல், தானும் உச்சத்தை தொட்டு விடலாம் என்ற நம்பிக்கையோடு வெள்ளித்திரையில் நுழைந்த கவின், ஒரு வெற்றி படத்தை கொடுத்து விட்டு தனது செயலில் அதிரடி காட்ட தொடங்கினார்...