பிக் பாஸில் இருந்து வெளியேற்றப்பட்ட சரவணன்! - உண்மையான காரணம் இது தான்!
Tuesday August-06 2019

கடந்த ஞாயிற்றுக்கிழமை பிக் பாஸின் 5 வது போட்டியாளராக ரேஷ்மா வெளியேற்றப்பட்ட நிலையில், நேற்று சரவணன் அதிரடியாக பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டிருப்பது போட்டியாளர்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

கடந்த சில நாட்களுக்கு முன்பு பெண்கள் குறித்து கமல் பேசிய போது, கல்லூரி படிக்கும் போது பெண்களை உரசுவதற்காகவே நான் பேருந்தில் சென்றிருக்கிறேன், என்று சரவணன் கூறினார். இதை கேட்ட கமல் சிறித்ததோடு, அரங்கத்தில் இருந்தவர்களும் சிரித்தார்கள்.

 

ஆனால், சரவணனின் இத்தகைய பேச்சுக்கு பலர் கடும் கண்டம் தெரிவித்த நிலையில், இது தொடர்பாக சரவணனும் மன்னிப்பு கேட்டார்.

 

இந்த நிலையில், சரவணைன் பெண்கள் பேச்சை காரணம் காட்டி நேற்று அவரை பிக் பாஸ் வீட்டில் இருந்து கமல் வெளியேற்றிவிட்டார். மேலும், பெண்கள் குறித்து கொச்சையாக பேசிய சரவணனுக்கு இது தண்டனை என்றும் அவர் கூறினார்.ஆனால், உண்மையில் சரவணன் வெளியேறியதற்கு இயக்குநர் சேரன் தான் காரணம் என்று கூறப்படுகிறது. 

 

Cheran and Saravanan

 

கடந்த சில நாட்களுக்கு முன்பு இயக்குநர் சேரனை, தரகுறைவாக சரவணன் பேசினார். இதற்கு இயக்குநர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்ததோடு, சேனல் நிர்வாகத்தை தொடர்பு கொண்டு தங்களது கண்டனங்களை தெரிவித்திருக்கிறார்கள். கூடவே இயக்குநர் சங்கமும் இந்த விவகாரத்தில் தலையிட்டதாலயே சரவணனுக்கு இப்படி ஒரு தண்டனை கொடுக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

 

Related News

5407

75 நாட்களை கடந்த ‘சிறை’!- படக்குழுவின் வெற்றி கொண்டாட்டம்
Saturday March-14 2026

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் எஸ்...

தனுஷ் சார் முன்பு இயக்குநராக நிற்பது பெருமை - கென் கருணாஸ் நெகிழ்ச்சி
Friday March-13 2026

‘அசுரன்’ மற்றும் ‘விடுதலை 2’ ஆகிய படங்களில் தன் சிறப்பான நடிப்பின் மூலம் கவனம் ஈர்த்த கென் கருணாஸ், நாயகனாக நடித்து இயக்கியிருக்கும் திரைப்படம் ‘யூத்’...

Recent Gallery