கடந்த ஞாயிற்றுக்கிழமை பிக் பாஸின் 5 வது போட்டியாளராக ரேஷ்மா வெளியேற்றப்பட்ட நிலையில், நேற்று சரவணன் அதிரடியாக பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டிருப்பது போட்டியாளர்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு பெண்கள் குறித்து கமல் பேசிய போது, கல்லூரி படிக்கும் போது பெண்களை உரசுவதற்காகவே நான் பேருந்தில் சென்றிருக்கிறேன், என்று சரவணன் கூறினார். இதை கேட்ட கமல் சிறித்ததோடு, அரங்கத்தில் இருந்தவர்களும் சிரித்தார்கள்.
ஆனால், சரவணனின் இத்தகைய பேச்சுக்கு பலர் கடும் கண்டம் தெரிவித்த நிலையில், இது தொடர்பாக சரவணனும் மன்னிப்பு கேட்டார்.
இந்த நிலையில், சரவணைன் பெண்கள் பேச்சை காரணம் காட்டி நேற்று அவரை பிக் பாஸ் வீட்டில் இருந்து கமல் வெளியேற்றிவிட்டார். மேலும், பெண்கள் குறித்து கொச்சையாக பேசிய சரவணனுக்கு இது தண்டனை என்றும் அவர் கூறினார்.ஆனால், உண்மையில் சரவணன் வெளியேறியதற்கு இயக்குநர் சேரன் தான் காரணம் என்று கூறப்படுகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு இயக்குநர் சேரனை, தரகுறைவாக சரவணன் பேசினார். இதற்கு இயக்குநர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்ததோடு, சேனல் நிர்வாகத்தை தொடர்பு கொண்டு தங்களது கண்டனங்களை தெரிவித்திருக்கிறார்கள். கூடவே இயக்குநர் சங்கமும் இந்த விவகாரத்தில் தலையிட்டதாலயே சரவணனுக்கு இப்படி ஒரு தண்டனை கொடுக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
VR Dinesh and Kalaiyarasan’s recently released socio-political drama Thandakaaranyam is now streaming on Amazon Prime Video, and the film is witnessing a fresh wave of attention and conversations across India...
ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் மற்றும் டர்மெரிக் மீடியா தயாரிப்பில் உருவாகி, பரவலாக பாராட்டப்பட்ட ’அமரன்’ திரைப்படம், கோவாவில் நடைபெறும் 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் (IFFI) இந்தியன் பனோரமா பிரிவில் தொடக்க திரைப்படமாக அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது...
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு அறிமுகமாகி உச்ச நடிகர்களாக உயர்ந்தவர்கள் போல், தானும் உச்சத்தை தொட்டு விடலாம் என்ற நம்பிக்கையோடு வெள்ளித்திரையில் நுழைந்த கவின், ஒரு வெற்றி படத்தை கொடுத்து விட்டு தனது செயலில் அதிரடி காட்ட தொடங்கினார்...