Latest News :

போலீசார் போட்ட வழக்கு - எஸ்கேப்பான திரிஷாவின் முன்னாள் காதலர்!
Tuesday September-12 2017

சென்னையை சேர்ந்த பிரபல தொழிலதிபரான வருண் மணியண் ’வாயை மூடி பேசவும்’, ‘காவிய தலைவன்’ உள்ளிட்ட பல திரைப்படங்களை தயாரித்தும் இருக்கும் இவரை திரிஷாவின் முன்னாள் காதலர் என்றால் பட்டென்று ஞாபகத்திற்கு வந்துவிடுவார். இவருக்கும் திரிஷாவுக்கும் நிச்சயதார்த்தம் நடந்து பிறகு கருத்து வேறுபாடு காரணமாக திருமணம் நின்றுவிட்டது.

 

திருமணம் நின்றாலும் திரிஷாவின் முன்னாள் காதலர் என்று சொன்னால் வருண் மணியனா? என்று கேட்கும் அளவுக்கு இவர் பிரபலமாகிவிட்டார்.

 

இதற்கிடையில் சென்னையில் தனது விலை உயர்ந்த சொகுசு காரை அதிவேகமாக ஓட்டிச் சென்று போலீசில் வருண் மணியன் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

 

நேற்று மாலை சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் சொகுசு கார் ஒன்று அதிவேகத்தில் சீறிப்பாய, அதைப் பார்த்து பயந்துப்போன அப்பகுதி மக்கள் போலீஸுக்கு தகவல் கொடுத்துள்ளனர். காரை பின் தொடர்ந்த போலீசார் மடக்கி பிடித்து, காரை ஓட்டியவர் மீது பல்வேறு வழக்குகளை பதிவு செய்துள்ளனர்.

 

ஆனால், அந்த வழக்குகள் அத்தனையும் வருண் மணியனின் ஓட்டுநர் மீது போடப்பட்டுள்ளது. காரணம், காரை ஓட்டியது அவர் தான் என்று போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. ஆனால், இதை மறுக்கும் அப்பகுதி மக்கள், டிரைவராக வேலை பார்க்கும் ஒருவர் விலை உயர்ந்த காரை இப்படி பொறுப்பிலாமல் அதிவேகமாக, அதுவும் மக்கள் கூட்டம் நிறைந்த பகுதியில் ஓட்டுவார்களா? என்று கேள்வி எழுப்பியதோடு, காரை அதன் உரிமையாளர் வருண் மணியன் தான் ஓட்டியிருப்பார், போலீஸ் வழக்கு என்றதும், அவரது டிவரை மாட்டிவிட்டு எஸ்கேப் ஆகியிருக்கிறார், என்று கூறுகிறார்கள்.

 

ஆக, காரை அதிவேகமாக ஓட்டி விட்டு, அதன் மூலம் விபத்து ஏற்பட்டால், முதலாளிகள் தங்களது டிரைவர்களை போலீசிக் சிக்க வைத்துவிட்டு எஸ்கேப் ஆவது, சினிமாவில் மட்டுமல்ல நிஜத்திலும் சகஜமான ஒன்று தான். அதனால, பணக்காரங்களுக்கு இதெல்லாம் சாதரணமப்பா...

Related News

542

சக்தி ஃபிலிம் பேக்டரி நிறுவனத்துடன் வெற்றியை கொண்டாடிய ‘காந்தி கண்ணாடி’ படக்குழு!
Saturday September-13 2025

இயக்குநர் ஷெரீஃப் தனது முதல் படமான ‘ரணம் அறம் தவறேல்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, இதயபூர்வமாக கற்பனை செய்த கதையை, தயாரிப்பாளர் ஜெய் கிரண் (ஆதிமூலம் கிரியேஷன்ஸ்) உறுதியுடன் கையில் எடுத்ததின் விளைவாக உருவானது ‘காந்தி கண்ணாடி’...

விஜய் ஆண்டனி என் குடும்பத்தில் ஒருவர் - ஷோபா சந்திரசேகர் பெருமிதம்
Saturday September-13 2025

விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன்ஸ் தயாரிப்பில் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கும் சக்தி திருமகன் படத்தின் முன் வெளியீட்டு விழா 10...

ஹீரோ மற்றும் தயாரிப்பாளராக மீண்டும் களம் இறங்கும் ரமீஸ் ராஜா!
Friday September-12 2025

’டார்லிங் - 2’(2016) ஹாரர் காமெடி படத்தையும், ’விதிமதி உல்டா’ (2017) திரில்லர் படத்தையும் தயாரித்து கதாநாயகனாகவும் நடித்து தமிழ்த் திரையுலகிற்கு புதிய கதாநாயகனாகவும், தயாரிப்பாளராகவும் அறிமுகமானவர் ரமீஸ் ராஜா...

Recent Gallery