அஜித்தின் ‘நேர்கொண்ட பார்வை’ இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. நேற்று நள்ளிரவு 1 மணியில் இருந்தே திரையரங்கத்தில் கொண்டாட தொடங்கிவிட்ட அஜித் ரசிகர்கள், தமிழகம் முழுவதும் மிகப்பெரிய அளவில் படத்தை கொண்டாடி வருகிறார்கள்.
சென்னையின் பல திரையரங்குகளில் நள்ளிரவு 1 மணி, அதிகாலை 4 மணிக்கு சிறப்ப் காட்சிகள் திரையிடப்பட்டது. இதனால் திரையரங்கங்கள் இருக்கும் பகுதிகள் திருவிழா போல் காட்சியளித்து வருகிறது.
இந்த நிலையில், டிக்கெட் பிரச்சினையால் சென்னையில் உள்ள திரையரங்கு முன்பு அஜித் ரசிகர் ஒருவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை, சத்யம் திரையரங்கு முன்பு அஜித் ரசிகர் ஒருவர், உடல் முழுவதும் பெட்ரோலை ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயற்சித்திருக்கிறார். காரணம், அவர் டிக்கெட்டுக்காக பல மணி நேரங்கள் காத்திருந்தும் அவருக்கு டிக்கெட் கிடைக்கவில்லையாம். அதேபோல், விக்கெட் விலையும் ரொம்ப அதிகமாக இருப்பதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த காட்சியை நேரில் பார்த்த நடிகர் சாந்தனு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
I DONT KNW WAT TO SAY!
— Shanthnu Buddy (@imKBRshanthnu) August 7, 2019
At #Sathyam now where a man RIGHT NXT TO ME was bathing in petrol&searching fr a matchstick to burn himself bcz of sme ticket issue for #NKP#THALA or any othr STAR will def not encourage this!
It’s ur life against a movie ticket
Police have arrested him nw
VR Dinesh and Kalaiyarasan’s recently released socio-political drama Thandakaaranyam is now streaming on Amazon Prime Video, and the film is witnessing a fresh wave of attention and conversations across India...
ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் மற்றும் டர்மெரிக் மீடியா தயாரிப்பில் உருவாகி, பரவலாக பாராட்டப்பட்ட ’அமரன்’ திரைப்படம், கோவாவில் நடைபெறும் 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் (IFFI) இந்தியன் பனோரமா பிரிவில் தொடக்க திரைப்படமாக அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது...
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு அறிமுகமாகி உச்ச நடிகர்களாக உயர்ந்தவர்கள் போல், தானும் உச்சத்தை தொட்டு விடலாம் என்ற நம்பிக்கையோடு வெள்ளித்திரையில் நுழைந்த கவின், ஒரு வெற்றி படத்தை கொடுத்து விட்டு தனது செயலில் அதிரடி காட்ட தொடங்கினார்...