Latest News :

துருக்கி ராணுவ பிடியில் இருந்து விடுபட்ட ‘துருவ நட்சத்திரம்’ குழு
Tuesday September-12 2017

கெளதம் மேனன் இயக்கத்தில் விக்ரம், பார்த்திபன், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நடிக்கும் படம் ‘துருவ நட்சத்திரம்’ இப்படத்தின் படப்பிடிப்பு பல்கேரியா, துருக்கி போன்ற நாடுகளில் நடத்தப்பட்டு வருகிறது.

 

இதற்கிடையே பல்கேரியாவில் படப்பிடிப்பை முடித்துக் கொண்டு துருக்கி நாட்டிற்கு படக்குழுவினர் சென்ற போது, அவர்களை அந்நாட்டு பாதுகாப்பு படை எல்லையில் மடக்கியதோடு, நாட்டிற்குள்ளும் அனுமதிக்கவில்லை. முறையான ஆவணங்கள் அனைத்தையும் படக்குழுவினர் வைத்திருந்தாலும், சுமார் 24 மணி நேரத்திற்கு மேலாக படக்குழுவினர் எல்லையில் தவித்துள்ளனர். இதை தனது ட்விட்டர் பக்கத்தில் இயக்குநர் கெளதம் மேனன் தெரிவித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

 

பிறகு அங்கிருந்தவர்கள் சிலர் செய்த உதவி மூலம், தற்போது துருக்கி பாதுகாப்பு படையினரிடம் இருந்து விடுபட்டுள்ள துருவ நட்சத்திர படக்குழு, துருக்கி நாட்டிற்குள்ளும் நுழைந்துவிட்டதாக கெளதம் மேனன் தெரிவித்துள்ளார்.

 

மேலும், தனது ட்விட்டர் பதிவை ரீட்வீட் செய்து, விஷயத்தை அனைவருக்கு எடுத்துச் சென்றதற்கு நன்றியும் அவர் தெரிவித்துள்ளார்.

Related News

543

கலைஞர்களுக்கு விருது வழங்கி கெளரவித்த ’ப்ரோவோக் கலை விழா 22025’!
Monday November-03 2025

நவம்பர் 1 மற்றும் 2-ம் தேதிகளில் ராயப்பேட்டையில் உள்ள THE MUSIC ACADEMY-யில் 3-வது ஆண்டாக PROVOKE ART FESTIVAL 2025 கோலாகலமாக நடைபெற்றது...

கண்ணகி நகர் கார்த்திகாவிற்கு ரூ.1 லட்சம் கொடுத்து வாழ்த்து தெரிவித்த நடிகர் மன்சூர் அலிகான்!
Sunday November-02 2025

பஹ்ரைனில் நடந்த ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டியில் இந்திய மகளிர் கபடி அணி, இறுதி போட்டியில் ஈரானை வீழ்த்தி தங்கம் வென்றது...

Recent Gallery