மனைவியின் தற்கொலைக்கு காரணமான நடிகரை போலீசார் கைது செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கு நடிகரான மது பிரகாஷ், சில படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து வருகிறார். ‘பாகுபலி’ படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்திருக்கும் இவரது மனைவி பாரதி கடந்த செவ்வாய்க்கிழமை வீட்டில் தூக்கூ போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
அவர் தற்கொலைக்கு மது பிரகாஷ் அவரை வரதட்சணை கேட்டு கொடுமைப் படுத்தியது தான் காரணம், என்று புகார் அளிக்கப்பட்டது.
கடந்த 2014 ஆம் ஆண்டு மது பிரகாஷ் - பாரதி திருமணம் நடைபெற்றிருக்கிறது. அப்போதே மது வீட்டில் மதுவுக்கு ரூ.15 லட்சம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இருப்பினும் தொடர்ந்து அவர் வரதட்சணை கேட்டு பாரதியை கொடுமைப்படுத்தி வந்ததாகவும், வீட்டுக்கு லேட்டாக வருவதும் என்று இருந்திருக்கிறார். இதனால், கணவன், மனைவி இடையே அடிக்கடி சண்டை வந்ததாகவும், பாரதியின் பெற்றோர் போலீசிடம் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து மது பிரகாஷை கைது செய்திருக்கும் போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
VR Dinesh and Kalaiyarasan’s recently released socio-political drama Thandakaaranyam is now streaming on Amazon Prime Video, and the film is witnessing a fresh wave of attention and conversations across India...
ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் மற்றும் டர்மெரிக் மீடியா தயாரிப்பில் உருவாகி, பரவலாக பாராட்டப்பட்ட ’அமரன்’ திரைப்படம், கோவாவில் நடைபெறும் 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் (IFFI) இந்தியன் பனோரமா பிரிவில் தொடக்க திரைப்படமாக அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது...
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு அறிமுகமாகி உச்ச நடிகர்களாக உயர்ந்தவர்கள் போல், தானும் உச்சத்தை தொட்டு விடலாம் என்ற நம்பிக்கையோடு வெள்ளித்திரையில் நுழைந்த கவின், ஒரு வெற்றி படத்தை கொடுத்து விட்டு தனது செயலில் அதிரடி காட்ட தொடங்கினார்...