தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார், தென்னிந்திய சினிமாவின் நம்பர் ஒன் ஹீரோயின் என்ற பெருமையோடு, தொடர்ந்து ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து அரும் நயன்தாரா, நடித்தாலே அந்த படம் வெற்றி என்ற டாக் திரையுலகில் இருக்கிறது. ஏன், அஜித்தின் ‘விஸ்வாசம்’ கூட நயன்தாரா நடித்ததால் தான், அவ்வளவு பெரிய வெற்றி பெற்றது, என்றெல்லாம் அவரது ரசிகர்கள் பெருமை பேசிக் கொண்டார்கள்.
இதற்கிடையே, நயன்தாராவின் நடிப்பில் உருவாகி சில பல சர்ச்சைகளை உருவாக்கிய படம் ‘கொலையுதிர் காலம்’. ’பில்லா 2’ என்ற படு மொக்கை படத்தை இயக்கிய சக்ரி டொலட்டி இயக்கியிருக்கும் இப்படம், வெளியீட்டு தயாராகி பல மாதங்கள் ஆனாலும், வியாபாரம் ஆகாததால் ரிலீஸ் ஆகாமலே இருந்தது. ஒவ்வொரு முறையும் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டாலும் படம் மட்டும் ரிலீஸாகவில்லை.
இந்த நிலையில், வழக்கம் போல ஆகஸ் 9 ஆம் தேதி படம் ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், நேற்றும் காலை முதல் படம் வெளியாகவில்லை. பிறகு மாலை காட்சி ரிலீஸ் ஆனது. நயன்தாரா படம் என்பதாலும், வார இறுதி நாள் என்பதாலும், நேற்று மாலை ரசிகர்கள் கூட்டம் அதிகமாகவே நயன்தாரா படத்திற்கு இருந்தது. படம் ஆரம்பிக்கும் போது இருந்த கூட்டம், இடைவேளை நெருங்கும் போது பாதியாக குறைந்தது, திரையரங்கில் இருந்த மற்ற ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்தது.
மேலும், முழு படத்தை பார்த்த பாதி பேரிடம், படம் எப்படி என்று கேட்டதற்கு, “நான் என் வாழ்நாளில் பார்த்த மிக மோசமான படம் இது தான்” என்று ஒருவர் கூறினார். மற்றொருவரோ, “போட்ட பணம் கைக்கு வராது என்று தெரிந்தே இந்த பட தயாரிப்பாளர் இந்த படத்தை தயாரித்திருக்கிறார், ஒண்ணுமே இல்லாத இந்த படத்தை அவர் ஏன் தயாரித்தார் என்றே தெரியவில்லை” என்று கூறினார்.

இப்படி, நயன்தாரா படத்திற்கு ரசிகர்களிடம் கிடைத்திருக்கும், யாரும் எதிர்ப்பார்க்காத, இந்த மோசமான விமர்சனத்தால், ’கொலையுதிர் காலம்’ படக்குழு அதிர்ச்சியடைந்துள்ளனர்.
VR Dinesh and Kalaiyarasan’s recently released socio-political drama Thandakaaranyam is now streaming on Amazon Prime Video, and the film is witnessing a fresh wave of attention and conversations across India...
ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் மற்றும் டர்மெரிக் மீடியா தயாரிப்பில் உருவாகி, பரவலாக பாராட்டப்பட்ட ’அமரன்’ திரைப்படம், கோவாவில் நடைபெறும் 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் (IFFI) இந்தியன் பனோரமா பிரிவில் தொடக்க திரைப்படமாக அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது...
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு அறிமுகமாகி உச்ச நடிகர்களாக உயர்ந்தவர்கள் போல், தானும் உச்சத்தை தொட்டு விடலாம் என்ற நம்பிக்கையோடு வெள்ளித்திரையில் நுழைந்த கவின், ஒரு வெற்றி படத்தை கொடுத்து விட்டு தனது செயலில் அதிரடி காட்ட தொடங்கினார்...