பிரபுதேவாவை வைத்து ‘குலேபகாவலி’ படத்தை இயக்கிய கல்யாண், அதே பார்மட்டில் ஜோதிகாவை வைத்து ‘ஜாக்பாட்’ படத்தை இயக்கினார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியான இப்படம் கலவையான விமர்சனங்கள் பெற்றாலும், குடும்ப ரசிகர்களை வெகுவாக கவர்ந்து, வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
இந்த நிலையில், தனது அடுத்தப் படத்திற்கு தயாராகியிருக்கும் இயக்குநர் கல்யாண், இந்த முறையும் ஹீரோயின் ஒருவருடன் கைகோர்த்திருக்கிறார்.
ஆம், இயக்குநர் கல்யாண் தனது அடுத்தப் படத்தையும் ஹீரோயின் சப்ஜக்ட்டாகவே இயக்க உள்ளார். இதில் கதையின் நாயகியாக ஹன்சிகா நடிக்கிறார். காமெடி பிளஸ் ஹாரர் படமாக உருவாகும் இப்படத்தில் ஹன்சிகா போலீஸ் அதிகாரி வேடத்தில் நடிக்கிறார். மேலும், யோகி பாபு, நான் கடவுள் ராஜேந்திரன், மன்சூர் அலிகான் என கல்யாணின் கம்பெனி நடிகர்களும் இந்த படத்தில் இருக்கிறார்கள்.

தற்போது இப்படத்தின் ஆரம்ப கட்ட பணிகளில் ஈடுபட்டிருக்கும் இயக்குநர் கல்யாண், இப்படம் குறித்து விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளார்.
VR Dinesh and Kalaiyarasan’s recently released socio-political drama Thandakaaranyam is now streaming on Amazon Prime Video, and the film is witnessing a fresh wave of attention and conversations across India...
ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் மற்றும் டர்மெரிக் மீடியா தயாரிப்பில் உருவாகி, பரவலாக பாராட்டப்பட்ட ’அமரன்’ திரைப்படம், கோவாவில் நடைபெறும் 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் (IFFI) இந்தியன் பனோரமா பிரிவில் தொடக்க திரைப்படமாக அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது...
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு அறிமுகமாகி உச்ச நடிகர்களாக உயர்ந்தவர்கள் போல், தானும் உச்சத்தை தொட்டு விடலாம் என்ற நம்பிக்கையோடு வெள்ளித்திரையில் நுழைந்த கவின், ஒரு வெற்றி படத்தை கொடுத்து விட்டு தனது செயலில் அதிரடி காட்ட தொடங்கினார்...