அஜித் நடிப்பில் கடந்த 8 ஆம் தேதி வெளியான ‘நேர்கொண்ட பார்வை’ படம் குறித்து கலவையான விமர்சங்கள் வந்திருக்கின்றன. இது அஜித் படமாக இல்லை, என்று கூறப்பட்டாலும் அஜித்தின் இந்த வித்தியாசமான முயற்சியை மக்களும், பெரும்பாலான ஊடகங்களும் வரவேற்றுள்ளன.
அதேபோல், பெண்களும் இப்படத்திற்கு ஆதரவு தெரிவித்து சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
அதே சமயம், அஜித் ரசிகர்களில் சிலர் இப்படத்தை ஏற்றுக்கொண்டாலும் பெரும்பாலான ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்திருக்கிறார்கள். டிரைலரில் இடம்பெற்ற சண்டைக்காட்சியை பார்த்து, படத்திலும் மாஸான சண்டைக்காட்சிகளும், பஞ்ச் வசனங்களும் இருக்கும் என்று எதிர்ப்பார்த்த அஜித் ரசிகர்களுக்கு, அவை இல்லாததால் ஏமாற்றமே மிஞ்சியது. மேலும், நீதிமன்றத்திலே இரண்டாம் பாதி முழுவதும் முடிவதும் ரசிகர்களை சலிப்படைய வைத்திருக்கிறது.
இந்த நிலையில், திரையரங்கம் ஒன்றில் ’நேர்கொண்ட பார்வை’ படம் பார்த்த ரசிகர் ஒருவர், சலிப்படைந்து திரையரங்கிலே சாவகாசமாக படுத்து உறங்கியுள்ளார். அதை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்.
இதோ அந்த வீடியோ,
சார் தூங்கிட்டான் சார் ! 😑😹 #NKP pic.twitter.com/lQ1G5BnVlV
— TʜʀɪʟʟᴇR ツ (@Itz_Thriller3) August 9, 2019
விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகியுள்ள ‘கிங்டம்’ திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது...
சிவகார்த்திகேயன் புரொடக்சன்ஸ் வழங்கும் இயக்குநர் ராஜவேல் இயக்கத்தில் நடிகர்கள் தர்ஷன், காளி வெங்கட், ஆர்ஷா பைஜூ உள்ளிட்டப் பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'ஹவுஸ் மேட்ஸ்'...
18 கிரியேட்டர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சசிகலா பிரபாகரன் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் பாலாஜி செல்வராஜ் இயக்கத்தில், நடிகர் சரவணன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடிக்க, நீதிமன்ற வழக்கின் பின்னணியில், அசத்தலான இணையத் தொடராக ZEE5-ல் 2025 ஜூலை 18 ஆம் தேதி வெளியான ‘சட்டமும் நீதியும்’ தொடர், ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று, வெற்றியடைந்துள்ளது...