பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் வித்யா பாலனுக்கு தமிழ்ப் படங்களில் நடிக்க ஏகப்பட்ட வாய்ப்புகள் வந்தாலும், அவர் அனைத்தையும் நிராகரித்து வந்த நிலையில், தற்போது அஜித்தின் ‘நேர்கொண்ட பார்வை’ படத்தில் ஒரு சிறு வேடத்தில் நடித்திருக்கிறார். தயாரிப்பாளர் போனி கபூருக்காக தான் அவர் இந்த வேடத்தில் நடித்தாராம்.
அதே சமயம், வித்யா பாலன் பல தமிழ்ப் படங்களில் வாய்ப்புகளை நிராகரித்தாலும், ஒரு காலத்தில் தமிழ் சினிமா அவரை நிராகரித்ததாம். அதை எண்ணி அவர் பல நாட்கள் வருத்தப்பட்டிருக்கிறாராம்.
இது குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறிய வித்யா பாலன், மாதவன் நடிப்பில் லிங்குசாமி இயக்கிய ‘ரன்’ படத்தில் ஹீரோயினாக தேர்வு செய்து, மேக்கப் டெஸ்ட் எல்லாம் நடந்து முடிந்த நிலையில், என்னை நிராகரித்து விட்டார்கள். அதேபோல், ’மனசெல்லாம்’ படத்திலும் என்னை ஒப்பந்தம் செய்து பிறகு நீக்கிவிட்டார்கள். அது என் மனதே வெடித்துவிடுவது போலாகிவிட்டது.” என்று கூறியிருக்கிறார்.
அதே சமயம், ரஜினியின் ‘கபாலி’ படத்தில் நடிக்க வாய்ப்பு வந்த போது இந்தி படத்தில் நடித்துக் கொண்டிருந்ததால் அவரால் நடிக்க முடியாமல் போய்விட்டதாம்.
விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகியுள்ள ‘கிங்டம்’ திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது...
சிவகார்த்திகேயன் புரொடக்சன்ஸ் வழங்கும் இயக்குநர் ராஜவேல் இயக்கத்தில் நடிகர்கள் தர்ஷன், காளி வெங்கட், ஆர்ஷா பைஜூ உள்ளிட்டப் பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'ஹவுஸ் மேட்ஸ்'...
18 கிரியேட்டர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சசிகலா பிரபாகரன் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் பாலாஜி செல்வராஜ் இயக்கத்தில், நடிகர் சரவணன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடிக்க, நீதிமன்ற வழக்கின் பின்னணியில், அசத்தலான இணையத் தொடராக ZEE5-ல் 2025 ஜூலை 18 ஆம் தேதி வெளியான ‘சட்டமும் நீதியும்’ தொடர், ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று, வெற்றியடைந்துள்ளது...