விக்ரம் பிரபு நடிப்பில், அறிமுக இயக்குநர் அசோக் குமார் இயக்கத்தில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியான ‘நெருப்புடா’ படம் ரசிகர்களின் அமோக ஆதரவில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பதுடன், பல்வேறு பாராட்டுக்களையும் பெற்று வருகிறது.
தீயணைப்புத் துறை மற்றும் தீயணைப்பு வீரர்களை களமாக கொண்டு உருவாகியுள்ள இப்படத்தை பார்த்துவிட்டு ஐஏஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் பாராட்டு தெரிவித்து வருவதோடு, தீயணைப்பு வீரர்கள் பலர், ‘நெருப்புடா’ படத்தையும், ஹீரோ விக்ரம் பிரபுவையும் பாராட்டி சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில், நெருப்புடா படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சிக்காக பிக் பாஸ் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் விக்ரம் பிரபு சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளார் என்ற தகவல் வெளியானது. இது தொடர்பாக சமூக வலைதளத்தில் ரசிகர்கள் அவரிடம் கேள்வி எழுப்ப, அதற்கு விக்ரம் பிரபு, “என் தலைவி ஓவியா இல்லாத வீட்டிற்கு நான் வரமாட்டேன்” என்று பதில் தெரிவித்தார்.
அவரது இந்த பதிலால் கவரப்பட்ட அத்தனை ஓவியா ரசிகர்களும், தற்போது விக்ரம் பிரபுவின் ரசிகர்களாகிவிட்டார்கள்.
நவம்பர் 1 மற்றும் 2-ம் தேதிகளில் ராயப்பேட்டையில் உள்ள THE MUSIC ACADEMY-யில் 3-வது ஆண்டாக PROVOKE ART FESTIVAL 2025 கோலாகலமாக நடைபெற்றது...
எம்.பி.என் மூவிஸ் சார்பில் எம்...
பஹ்ரைனில் நடந்த ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டியில் இந்திய மகளிர் கபடி அணி, இறுதி போட்டியில் ஈரானை வீழ்த்தி தங்கம் வென்றது...