Latest News :

டாஸ்மாக் போல தான் பிக் பாஸ்! - வெடித்தது போராட்டம்
Wednesday August-14 2019

தமிழ் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். டிவி பார்க்காதவர்கள் கூட இந்த நிகழ்ச்சியை பார்க்க ஆர்வம் காட்டுகிறார்கள். காரணம், அடுத்தவர்களைப் பற்றி அறிந்துக் கொள்வதோடு, அடுத்தவர்களின் தனிப்பட்ட விஷயங்களும் நிகழ்ச்சியில் காட்டப்படுவதால் தான்.

 

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சிக்கு பலர் எதிர்ப்பு தெரிவித்து வந்தாலும், நிகழ்ச்சியை மேலும் எப்படி பரபரப்பாக்குவது, எப்படி சர்ச்சையாக்குவது என்ற யோசனையில் நிகழ்ச்சி குழுவினர் ஈடுபட்டு வருகிறார்கள். இதற்காகவே தனது பர்சனல் காரணங்களுக்காக பிக் பாஸ் வீட்டில் தொடர்ந்து இருக்க முடியாமல் வெளியேறிய வனிதாவை மீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் அழைத்து வந்திருக்கிறார்கள். அதேபோல், சர்ச்சை நடிகை கஸ்தூரியையும் பெரிய சம்பளம் கொடுத்து பிக் பாஸ் வீட்டுக்கு அழைத்து வந்திருக்கிறார்கள்.

 

தற்போது 50 நாட்களை கடந்திருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு எதிராக சென்னையில் மிகப்பெரிய போராட்டம் வெடித்திருக்கிறது. சமூக ஆர்வலர் ராஜேஷ்வரி பிரியா என்பவர், பிக் பாஸ் நிகழ்ச்சிகாக சென்னை வள்ளூவர்க்கோட்டத்தில் போராட்டத்தை நடத்தினார்.

 

அப்போது நிருபர்களிடம் பேசிய ராஜேஷ்வரி பிரியா, “பிக் பாஸ் நிகழ்ச்சி ரியாலிட்டி ஷோ என்றால் அதற்கான கட்டுப்பாடுகளுடன் நடக்க வேண்டும். ஆனால், அந்த நிகழ்ச்சி அப்படி நடக்கவில்லை. அதில் காதல், கசமுசா, ஆபாசமாக உடை அணிவது போன்றவற்றை காட்டுகிறார்கள். அதே போட்டி முடிந்த பிறகு வெளியே வரும் போட்டியாளர்கள், அதை சாதாரணமாக அவர்  அவர் வேலையை பார்க்கிறார்கள். ஆனால், நிகழ்ச்சியை பார்க்கும் இளைஞர்கள் அதனால் பாதிக்கப்படுகிறார்கள். நிகழ்ச்சியை பார்ப்பது, பார்க்காமல் இருப்பது அவர் அவர் விருப்பம், என்று கூறுவது சரியல்ல. அப்படியானால் பஸ் டாண்டுகளில் ஏன், பிக் பாஸ் நிகழ்ச்சியை விளம்பரம் செய்கிறார்கள். நடிகை, நடிகர்களை போட்டு நிகழ்ச்சியை நடத்துவது ஏன். நிகழ்ச்சியை பார்க்க மக்களை தூண்டுகிறார்கள்.

 

நடிகர் கமல்ஹாசனை ஒப்பந்தம் செய்து, அவர் மூலம் மக்களிடம் நிகழ்ச்சியை கொண்டு சேர்ப்பது ஏன்? எப்படி தெருவுக்கு தெரு டாஸ்மாக்கை திறந்து மக்களை குடிக்க தூண்டுகிறார்களோ, அதுபோல தான் பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்க்க மக்கள் தூண்டப்படுகிறார்கள். அதை நிறுத்த வேண்டும்.” என்று தெரிவித்தார்.

Related News

5469

’கிங்டம்’ படத்திற்கு குரல் கொடுத்த சூர்யாவுக்கு நன்றி தெரிவித்த விஜய் தேவரகொண்டா!
Tuesday July-29 2025

விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகியுள்ள ‘கிங்டம்’ திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது...

’ஹவுஸ் மேட்ஸ்’ பார்வையாளர்களுக்கும் முக்கியமான படமாக இருக்கும் - நடிகர் காளி வெங்கட்
Monday July-28 2025

சிவகார்த்திகேயன் புரொடக்சன்ஸ் வழங்கும் இயக்குநர் ராஜவேல் இயக்கத்தில் நடிகர்கள் தர்ஷன், காளி வெங்கட், ஆர்ஷா பைஜூ உள்ளிட்டப் பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'ஹவுஸ் மேட்ஸ்'...

மக்கள் கொடுத்த வரவேற்பால் பல மொழிகளில் டப்பாகும் ‘சட்டமும் நீதியும்’ இணையத் தொடர்!
Monday July-28 2025

18 கிரியேட்டர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சசிகலா பிரபாகரன் தயாரிப்பில்,  அறிமுக இயக்குநர் பாலாஜி செல்வராஜ் இயக்கத்தில், நடிகர் சரவணன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடிக்க, நீதிமன்ற வழக்கின் பின்னணியில், அசத்தலான இணையத் தொடராக ZEE5-ல் 2025 ஜூலை 18 ஆம் தேதி வெளியான ‘சட்டமும் நீதியும்’ தொடர், ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று, வெற்றியடைந்துள்ளது...

Recent Gallery