தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடன் வலம் வரும் நயன்தாராவின் நடிப்பில் கடந்த வாரம் வெளியான ‘கொலையுதிர் காலம்’ மிகப்பெரிய தோல்வியை சந்தித்திருக்கிறது. இதனால், அடுத்தப் படத்தை வெற்றிப் படமாக கொடுக்க வேண்டும் என்பதில் நயன் தீவிரமாக இருக்கிறார்.
அதேபோல், என்ன தான் படப்பிடிப்பில் பிஸியாக இருந்தாலும், தமிழகத்தில் நடக்கும் முக்கியமான சம்பவங்களில் நயன்தாரா தலைகாட்டாமல் இருந்ததில்லை. ஜல்லிக்கட்டு பிரச்சினை, முதல்வர் ஜெயலலிதாவின் மறைவு என அத்தனை இடங்களிலும் நயன் ஆஜராகியிருக்கிறார்.
இந்த நிலையில், கடந்த இரண்டு மாதங்களாக தமிழகத்தின் ஹாட் டாப்பிக்காக இருக்கும் அத்திவரதர் தரிசனத்தில் இன்று நயனும் ஆஜராகியிருக்கிறார். எப்போதும் போல தனது காதலர் விக்னேஷ் சிவனுடன்.
நயன்தாரா இன்று அத்திவரதரை தரிசிக்க வந்ததால், கூட்ட நெரிசலில் சிக்கி துவண்டு போயிருந்த சில பெருமாள் பக்தாஸ் குளுக்கோஸ் குடித்தது போல சற்று உற்சாகமடைந்தார்கள், என்பது கூடுதல் தகவல்.
இதோ நயனினி அத்திவரதர் தரிசனம்,
#Nayanthara and #wikki at Kanchipuram temple for athivaradhar dharisanam yesternight 🤲🙏
— 💚 AnjanA 💚 (@Nayan_Addict) August 15, 2019
pic.twitter.com/iq9i9hnnIp
VR Dinesh and Kalaiyarasan’s recently released socio-political drama Thandakaaranyam is now streaming on Amazon Prime Video, and the film is witnessing a fresh wave of attention and conversations across India...
ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் மற்றும் டர்மெரிக் மீடியா தயாரிப்பில் உருவாகி, பரவலாக பாராட்டப்பட்ட ’அமரன்’ திரைப்படம், கோவாவில் நடைபெறும் 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் (IFFI) இந்தியன் பனோரமா பிரிவில் தொடக்க திரைப்படமாக அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது...
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு அறிமுகமாகி உச்ச நடிகர்களாக உயர்ந்தவர்கள் போல், தானும் உச்சத்தை தொட்டு விடலாம் என்ற நம்பிக்கையோடு வெள்ளித்திரையில் நுழைந்த கவின், ஒரு வெற்றி படத்தை கொடுத்து விட்டு தனது செயலில் அதிரடி காட்ட தொடங்கினார்...