தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தாலும், நடிக்ப்பு வராத நடிகை, என்ற இமேஜ் கீர்த்தி சுரேஷுக்கு இருந்தது. ஆனால், அந்த படம் ‘நடிகையர் திலகம்’ என்ற படம் வெளியாவதற்கு முன்பு தான். அப்படம் வெளியான பிறகு தமிழ் மற்றும் தெலுங்கு இரு மொழி திரையுலமும் கீர்த்தி சுரேஷையும், அவரது நடிப்பையும் கொண்டாடியது.
சமீபத்தில் அறிவிக்கப்பட்ட தேசிய விருது மூலம் கீர்த்தி சுரேஷை தற்போது இந்திய சினிமா உலகமே கொண்டாடி வருகிறது. தேசிய விருது பெற்ற மகிழ்ச்சியில் இருக்கும் கீர்த்தி சுரேஷ், பாலிவுட்டில் அறிமுகமாகும் சந்தோஷத்தில் இருக்கிறார்.
கீர்த்தி சுரேஷ், சந்தோஷமாக இருக்க, இப்படி பல காரணங்கள் இருந்தாலும், காரணமே இல்லாமல் கீர்த்தி சுரேஷின் வெற்றியை தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோ ஒருவர் சந்தோஷத்துடன் கொண்டாடியிருக்கிறார். அதுவும் ஆடம்பரமான பார்ட்டியோடு கொண்டாடியிருப்பதாக தகவல் கசிந்திருக்கிறது.
அந்த மாஸ் ஹீரோவுடன் கீர்த்தி சுரேஷ், இரண்டு படங்களில் ஹீரோயினாக நடித்திருக்கிறார். அதற்காக தான் அந்த ஹீரோ கீர்த்தியின் வெற்றியை கொண்டாடினாரா? என்று கேட்டால், ”அதற்கும் மேல...” என்று கோடம்பாக்கத்தில் பேச்சு அடிபடுகிறது.
எது எப்படியோ, ஆண்ட்ரியா போல, திருமணமான ஆணுடன் வைத்திருந்த தொடர்பால், மனதளவிலும், உடல் அளவிலும் பாதிக்கப்பட்டு, அதனால் சிகிச்சைப் பெற்றேன், என்று கீர்த்தி சுரேஷ், எதிர்காலத்தில் சொல்லாமல் இருந்தால் சரி.
விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகியுள்ள ‘கிங்டம்’ திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது...
சிவகார்த்திகேயன் புரொடக்சன்ஸ் வழங்கும் இயக்குநர் ராஜவேல் இயக்கத்தில் நடிகர்கள் தர்ஷன், காளி வெங்கட், ஆர்ஷா பைஜூ உள்ளிட்டப் பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'ஹவுஸ் மேட்ஸ்'...
18 கிரியேட்டர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சசிகலா பிரபாகரன் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் பாலாஜி செல்வராஜ் இயக்கத்தில், நடிகர் சரவணன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடிக்க, நீதிமன்ற வழக்கின் பின்னணியில், அசத்தலான இணையத் தொடராக ZEE5-ல் 2025 ஜூலை 18 ஆம் தேதி வெளியான ‘சட்டமும் நீதியும்’ தொடர், ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று, வெற்றியடைந்துள்ளது...