பிக் பாஸ் சீசன் 3 யில் பல சண்டைகள் நடைபெற்று வந்த நிலையில், இன்று வெளியாகும் போட்டியாளர் விஷயத்தில் பிக் பாஸ் பலவித ட்விஸ்ட்டுகளை வைத்து மேலும் பரபரப்பு கூட்டியிருக்கிறார்.
இந்த வாரம் நாமினேஷனில் அபிராமி, மதுமிதா, லொஸ்லியா ஆகியோரது பெயர் இடம் பெற்ற நிலையில், மதுமிதா அடுத்த வாரத்திற்கான கேட்பன் போட்டியில் வெற்றி பெற்றதால் அவர் காப்பாற்றப்படுவார் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், இன்று லொஸ்லியா காப்பாற்ற பட்டிருக்கிறார்.
இதனால், எலிமினேஷன் பட்டியலில் அபிராமி மற்றும் மதுமிதா இருவர் மட்டுமே இருக்க, மதுமிதா போட்டிக்கான கண்டெண்ட் கொடுப்பதில் முக்கியத்துவம் பெருவதால் அபிராமி தான் வெளியேற்றப்படுவார் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. அதற்கு ஏற்றவாறு நம்பத்தகுந்த தகவல்களும் அபிராமி தான் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுவார் என்று கூறப்பட்டது.
ரசிகர்களின் வாக்குகளை வைத்து பார்க்கும் போதும், அபிராமிக்கு குறைவான வாக்குகள் இருந்ததால் அவர் தான் வெளியேற்றப்படுவார் என்று கூறப்பட்டது. ஆனால், தற்போது நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. ஆம், பிக் பாஸில் இன்று அபிராமிக்கு பதில் மதுமிதா வெளியேறியிருக்கிறார்.
இதற்கு காரணம், மதுமிதா பிக் பாஸ் வீட்டில் தற்கொலைக்கு முயன்றது தான் என்று கூறப்படுகிறது. நேற்று இரவே மதுமிதா தற்கொலைக்கு முயன்றதாக தகவல் வெளியானது. ஆனால், அது குறித்து எந்தவித புரோமோவும் வெளியாகவில்லை.
இந்த நிலையில், இன்று பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிக்கும் மதுமிதா, கமலுடன் பேசும் போது அவரது கையில் காயம் ஏற்பட்டிருப்பது தெரிகிறது. மேலும், திரையில் தோன்றும் சேரன், மதுமிதா செய்தது தவறான செயல், என்றும் கூறுகிறார்.
இதோ அந்த புரோமோ,
#Day55 #Promo1 #பிக்பாஸ் இல் இன்று.. #BiggBossTamil - தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3 #KamalHaasan #VijayTelevision pic.twitter.com/oAtURCOoUg
— Vijay Television (@vijaytelevision) August 17, 2019
VR Dinesh and Kalaiyarasan’s recently released socio-political drama Thandakaaranyam is now streaming on Amazon Prime Video, and the film is witnessing a fresh wave of attention and conversations across India...
ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் மற்றும் டர்மெரிக் மீடியா தயாரிப்பில் உருவாகி, பரவலாக பாராட்டப்பட்ட ’அமரன்’ திரைப்படம், கோவாவில் நடைபெறும் 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் (IFFI) இந்தியன் பனோரமா பிரிவில் தொடக்க திரைப்படமாக அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது...
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு அறிமுகமாகி உச்ச நடிகர்களாக உயர்ந்தவர்கள் போல், தானும் உச்சத்தை தொட்டு விடலாம் என்ற நம்பிக்கையோடு வெள்ளித்திரையில் நுழைந்த கவின், ஒரு வெற்றி படத்தை கொடுத்து விட்டு தனது செயலில் அதிரடி காட்ட தொடங்கினார்...