கிரேட் எம்பரர் புரொடக்ஷன்ஸ் எனும் புதிய படநிறுவனம் சார்பில் சி.பிரேம்குமார் மிகுந்த பொருட்ச்செலவில் பிரம்மாண்டமாக தயாரிக்கும் படம் ’சீமத்தண்ணி’.
பல முன்னனி இயக்குனர்களிடம் 25க்கும் மேற்ப்பட்ட படங்களில் துணை,இணை இயக்குனராக பணியாற்றிய விஜய்மோகன்..இப்படத்தின் கதை,திரைக்கதை,வசனம் எழுதி.இயக்குனராக அறிமுகமாகிறார்.
விதார்த்,விஜய் வசந்த கதாநாயகர்களாக நடிக்க,கதாநாயகிகளாக சாந்தினி மற்றும் சுபிக்ஷா நடிக்கின்றனர். இவர்களுடன் யோகிபாபு,ஹலோ கந்தசாமி உள்ளிட்ட பலர் நடிக்க, மலர்விழி என்ற முக்கிய வேடத்தில் சாந்தினி நடிக்கிறார்.
இப்படத்தின் துவக்க விழா பூஜையுடன் சமீபத்தில் நடைபெற்றது. இயக்குநர் ஏ.சற்குணம் கிளாப் போர்டு அடித்து படப்பிடிப்பினை தொடங்கி வைத்தார்.
மஞ்சள் படத்திற்கு பின் ’மசானி’ ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு சதீஇஷ் திருமூர்த்தி இசையமைக்க, சி.எஸ். பிரேம்குமார் எடிட்டிங் செய்கிறார்.
இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி விஜய்மோகன் இயக்குகிறார். நாதன் லீ ஆக்ஷன் காட்சிகளை வடிவகைக்க, விஜயராஜன் கலைத் துறையை கவனிக்கிறார். தினேஷ், ஜாய் மதி ஆகியோர் நடனத்தை வடிவமைக்க, நடராஜன் உடலைகளை வடிவமைக்கிறார். நந்தலாலா, சீர்காழி சிற்பி, மோகன்ராஜ் ஆகியோர் பாடல்கள் எழுத, தயாரிப்பு ஒருங்கிணைப்பாளராக விஜய் கே.செல்லையா பணிபுரிய, சி.பிரேம்குமார் தயாரிக்கிறார்.
உலக அளவில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைத்து அதரப்பினரையும் கவர்ந்து, இன்று வரை அனைத்து தரப்பின் மக்களின் பேவரைட் ஹாலிவுட் திரைப்படங்களில் ஒன்றாக இருக்கும் ‘ஜுராசிக் வேர்ல்ட் ட்ரையாலாஜி’-யின் வெற்றிக்குப் பிறகு புதிய கதையுடன் மீண்டும் உருவாகியுள்ளது...
மெட்ராஸ் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் & இயக்குநர் கார்த்திகேயன் மணி இயக்கத்தில் சத்யராஜ், காளி வெங்கட், ஷெல்லி, ரோஷினி ஹரிப்பிரியன் , விஷ்வா ஜார்ஜ் மரியான், அர்ச்சனா சந்தூக் , சுனில் சுகதா சாம்ஸ் ,கீதா கைலாசம் மற்றும் பலர் நடித்திருந்த மெட்ராஸ் மேட்னி எனும் திரைப்படம் ஜூன் மாதம் 6 ஆம் தேதியன்று வெளியானது...
தெலுங்கு திரையுலகின் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் திரைப்படமான ‘பெத்தராயுடு’ வெளியாகி 30 ஆனடுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் விதமாக நடிகர் ரஜினிகாந்த் மற்றும் நடிகர் டாக்டர்...