வட மாநிலங்களில் பெய்து வரும் கன மழையால் அங்கிருக்கும் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கிறது. மேலும், பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு சாலைகளும் துண்டிக்கப்பட்டுள்ளது. உத்தரகாண்ட், இமாச்சலப் பிரதேசங்களில் அதிகமான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், மலையாளப் படத்தின் படப்பிடிப்புக்காக இமாச்சல பிரதேசத்தில் இருக்கும் நடிகை மஞ்சு வாரியர் உள்ளிட்ட படக்குழுவை சேர்ந்த 30 பேர் நிலச்சரிவில் சிக்கி தவித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
‘கயாட்டம்’ என்ற மலையாளப் படத்தில் நடித்து வரும் மஞ்சு வாரியர், அப்படத்தின் படப்பிடிப்புக்காக படக்குழுவினருடன் இமாச்சல பிரதேசத்தில் தங்கியிருக்கிறார். படக்குழுவினர் தங்கியிருக்கும் பகுதி மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாம். மேலும், அப்பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவினால் தொலைதொடர்புகள் துண்டிக்கப்பட்டிருக்கிறதாம்.
சேட்டிலைட் தொலைபேசி மூலம் தனது சகோதரரிடம் பேசிய மஞ்சு வாரியர், தான் உள்ளிட்ட படக்குழுவினர் நிலச்சரிவில் சிக்கியிருப்பதை தெரிவித்திருக்கிறார். மேலும், சில நிமிடங்களே அவரால் பேச முடிந்ததாகவும், அதற்குள் தொலைபேசி துண்டிக்கப்பட்டு விட்டதாகவும், மஞ்சு வாரியரின் சகோதரர் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, மஞ்சுவின் சகோதரர், மத்திய அமைச்சர் முரளிதரனுக்கு தகவல் கொடுக்க, அவர் இமாச்சலப் பிரதேச முதல்வர் ஜெய்ராம் தாகூருக்கு தெரிவித்திருக்கிறார். தற்போது மீட்பு குழுவினர் அப்பகுதிக்கு விரைந்துள்ளனர்.
மலையாள நடிகர் திலீப்பின் முன்னாள் மனைவியான மஞ்சு வாரியார் மலையாளத்தில் பல படங்களில் நடித்து வருவதோடு, தனுஷின் ‘அசுரன்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகியுள்ள ‘கிங்டம்’ திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது...
சிவகார்த்திகேயன் புரொடக்சன்ஸ் வழங்கும் இயக்குநர் ராஜவேல் இயக்கத்தில் நடிகர்கள் தர்ஷன், காளி வெங்கட், ஆர்ஷா பைஜூ உள்ளிட்டப் பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'ஹவுஸ் மேட்ஸ்'...
18 கிரியேட்டர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சசிகலா பிரபாகரன் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் பாலாஜி செல்வராஜ் இயக்கத்தில், நடிகர் சரவணன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடிக்க, நீதிமன்ற வழக்கின் பின்னணியில், அசத்தலான இணையத் தொடராக ZEE5-ல் 2025 ஜூலை 18 ஆம் தேதி வெளியான ‘சட்டமும் நீதியும்’ தொடர், ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று, வெற்றியடைந்துள்ளது...