பிக் பாஸ் வீட்டில் மட்டும் இன்றி, வெளியே வந்ததும் கூட மதுமிதாவால் பெரும் சர்ச்சை ஏற்பட்டிருக்கிறது. பிக் பாஸ் வீட்டில் தற்கொலை முயன்றதாக கூறி வெளியேற்றப்பட்ட மதுமிதா மீது விஜய் டிவி தரப்பில் இன்று போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
புகாரில் மதுமிதா தற்கொலை செய்துக்கொள்வதாக மிரட்டுவதாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது புகாரின் முழு பின்னணியும் தற்போது தெரிய வந்துள்ளது.
பிக் பாஸ் வீட்டில் இருந்து மதுமிதா வெளியே செல்லும் போது அவர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்கான பில் அனுப்பி வைக்கப்பட்டதாம். ஒப்பந்தத்தில் கூறியபடி மதுமிதா ஏற்கனவே ரூ.11.50 லட்சம் பெற்றுள்ளார். மீதமுள்ள ஒரு நாள் ரூ.80,000 வீதம் 42 நாட்களுக்கான பாக்கி பணத்தை திருப்பி தருவதாக விஜய் டிவி நிர்வாகம் கூறியிருக்கிறது. அப்போது அதற்கு ஒப்புக்கொண்ட மதுமிதா, திடீரென்று கடந்த 19 ஆம் தேதி பிக் பாஸ் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் டீனா என்பவருக்கு வாட்ஸ் அப் மூலம் வாய்ஸ் மெசேஜ் அனுப்பி மிரட்டல் விடுத்துள்ளார். அதில், இன்னும் இரண்டு நாட்களில் பாக்கி பணத்தை தரவில்லை என்றால் தற்கொலை செய்து கொள்வேன், என்று மிரட்டியுள்ளார்.
மேலும், இது குறித்து நடிகை மதுமிதாவிடம் கேட்டதற்கு, “விஜய் டிவியுடன் ஒப்பந்தம் செய்திருப்பதால் எதையும் தெரிவிக்க முடியாது. ஆனால், தனக்கு தர வேண்டிய நிலுவை தொகையை விஜய் டிவி தரவில்லை. இந்த புகாரை சட்ட ரீதியாக எதிர் கொள்வேன்” என்று தெரிவித்திருக்கிறார்.
விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகியுள்ள ‘கிங்டம்’ திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது...
சிவகார்த்திகேயன் புரொடக்சன்ஸ் வழங்கும் இயக்குநர் ராஜவேல் இயக்கத்தில் நடிகர்கள் தர்ஷன், காளி வெங்கட், ஆர்ஷா பைஜூ உள்ளிட்டப் பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'ஹவுஸ் மேட்ஸ்'...
18 கிரியேட்டர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சசிகலா பிரபாகரன் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் பாலாஜி செல்வராஜ் இயக்கத்தில், நடிகர் சரவணன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடிக்க, நீதிமன்ற வழக்கின் பின்னணியில், அசத்தலான இணையத் தொடராக ZEE5-ல் 2025 ஜூலை 18 ஆம் தேதி வெளியான ‘சட்டமும் நீதியும்’ தொடர், ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று, வெற்றியடைந்துள்ளது...