மதுமிதா பிக் பாஸ் வீட்டில் தற்கொலை முயன்று பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பிக் பாஸ் வீட்டை வந்ததும் கூட அவர் தற்கொலை செய்து கொள்வதாக விஜய் டிவியை மிரட்டியுள்ளார். இது குறித்து விஜய் டிவி தரப்பில் சென்னை கிண்டி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த புகாரின் பேரில் இன்று மதுமிதாவை போலீசார் விசாரித்ததாக தகவல் வெளியான நிலையில், விஜயின் டிவியின் புகார் குறித்து மதுமிதா முதல் முறையாக பேசியுள்ளார்.
இது குறித்து இன்று விளக்கம் அளித்திருக்கும் மதுமிதா, விஜய் டிவி தன் மீது பொய் புகார் அளித்திருப்பதாக தெரிவித்திருக்கிறார்.
தான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதற்கான பாக்கி தொகையை ஒரு குறிப்பிட்ட தேதியில் வழங்குவதாக கூறினார்கள். அதற்கு நானும் சம்மதித்தேன். ஆனால், திடீரென்று என் மீது போலீசில் புகார் அளித்திருக்கிறார்கள். அது ஏன் என்று எனக்கு தெரியவில்லை, என்று மதுமிதா கூறியிருக்கிறார்.
மேலும், இந்த விவகாரத்தில் நடிகர் கமல்ஹாசன் தலையிட்டு இதை சுமூகமாக தீர்த்து வைக்க வேண்டும், என்றும் மதுமிதா விருப்பம் தெரிவித்திருக்கிறார்.
விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகியுள்ள ‘கிங்டம்’ திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது...
சிவகார்த்திகேயன் புரொடக்சன்ஸ் வழங்கும் இயக்குநர் ராஜவேல் இயக்கத்தில் நடிகர்கள் தர்ஷன், காளி வெங்கட், ஆர்ஷா பைஜூ உள்ளிட்டப் பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'ஹவுஸ் மேட்ஸ்'...
18 கிரியேட்டர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சசிகலா பிரபாகரன் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் பாலாஜி செல்வராஜ் இயக்கத்தில், நடிகர் சரவணன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடிக்க, நீதிமன்ற வழக்கின் பின்னணியில், அசத்தலான இணையத் தொடராக ZEE5-ல் 2025 ஜூலை 18 ஆம் தேதி வெளியான ‘சட்டமும் நீதியும்’ தொடர், ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று, வெற்றியடைந்துள்ளது...