60 நாட்களை கடந்திருக்கும் பிக் பாஸ் சீசன் 3-யில் நேற்று கஸ்தூரி வெளியேற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த வாரத்திற்கான எலிமினேஷன் பட்டியலில் சேரன், கஸ்தூரி, சாண்டி, தர்ஷன் ஆகியோர் இடம்பெற்றிருந்த நிலையில், ரசிகர்களின் குறைவான வாக்குகளை பெற்றதால் கஸ்தூரி வெளியேற்றப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது.
ஆனால், உண்மையில் கஸ்தூரியை எலிமினேட் செய்ய பிக் பாஸ் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் விரும்பவில்லையாம். காரணம், பிக் பாஸில் கஸ்தூரி பங்கேற்க அவருக்கு பெரிய தொகை சம்பளமாக பேசப்பட்டிருக்கிறது. சமீபகாலமாக சர்ச்சையாக பேசி வந்த கஸ்தூரியால், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பெரிய அளவில் ரீச் கிடைக்கும் என்று எண்ணி தான் அவரை போட்டியாளராக பங்கேற்க வைத்தார்கள். ஆனால், பிக் பாஸ் வீட்டுக்குள் கஸ்தூரி வந்ததும், அவரால் சக போட்டியாளர்களுடன் போட்டி போட முடியவில்லையாம். குறிப்பான வனிதா அளவுக்கு கூட கஸ்தூரியால் கண்டெண்ட் கொடுக்க முடியவில்லையாம்.
மேலும், கஸ்தூரியின் அனைத்து நடவடிக்கைகளையும் சக போட்டியாளர்கள் உதாசினப்படுத்துவதோடு, ரசிகர்களும் அவர் மீது பெரிதாக விருப்பம் காட்டாததால் கஸ்தூரியே பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற முடிவு செய்திருக்கிறார்.
ரசிகர்களிடம் குறைவான வாக்குகள் பெற்றாலும், அவரை வெளியேற்றாமல் சீக்ரெட் ரூமில் வைக்க பிக் பாஸ் குழு முடிவு செய்ததாம், ஆனால், தனதுக்கு சீக்ரெட் ரூம் வேண்டாம் என்று மறுத்திருக்கும் கஸ்தூரி மூட்டை முடியச்சோடு நேற்று பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிவிட்டதாக கூறப்படுகிறத். இது உண்மையா? என்பது இன்றைய எப்பிசோட்டில் தெரிந்து விடும்.
அதே சமயம், கஸ்தூரி மீது பெரிய அளவில் நம்பிக்கை வைத்த பிக் பாஸ் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர், அவர் இப்படி பாதியிலே பயந்து விலகியிருப்பதால் ரொம்பவே அப்செட்டாகியிருக்கிறார்களாம். மேலும், எஞ்சி இருக்கும் 40 நாட்களில் நிகழ்ச்சியின் சுவாரஸ்யத்தை கூட்ட புதிய போட்டியாளரை களம் இறக்குவது குறித்தும் ஆலோசனை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
VR Dinesh and Kalaiyarasan’s recently released socio-political drama Thandakaaranyam is now streaming on Amazon Prime Video, and the film is witnessing a fresh wave of attention and conversations across India...
ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் மற்றும் டர்மெரிக் மீடியா தயாரிப்பில் உருவாகி, பரவலாக பாராட்டப்பட்ட ’அமரன்’ திரைப்படம், கோவாவில் நடைபெறும் 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் (IFFI) இந்தியன் பனோரமா பிரிவில் தொடக்க திரைப்படமாக அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது...
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு அறிமுகமாகி உச்ச நடிகர்களாக உயர்ந்தவர்கள் போல், தானும் உச்சத்தை தொட்டு விடலாம் என்ற நம்பிக்கையோடு வெள்ளித்திரையில் நுழைந்த கவின், ஒரு வெற்றி படத்தை கொடுத்து விட்டு தனது செயலில் அதிரடி காட்ட தொடங்கினார்...