பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கும் வித்யா பாலன், ஆரம்பத்தில் தமிழ் சினிமாவில் வாய்ப்பு தேடியிருக்கிறார். அவருக்கு சில படங்களின் வாய்ப்புகள் கிடைத்தாலும், பிறகு அவர் செட்டாக மாட்டார், என்று கூறி நீக்கப்பட்டிருக்கிறார்.
அந்த வகையில், லிங்குசாமியின் ‘ரன்’ உள்ளிட்ட சில படங்களில் வித்யா பாலனை தான் முதலில் ஹீரோயினாக ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள். ஆனால், சில காரணங்களுக்காக அவர் அப்படங்களில் இருந்து நீக்கப்பட்டதாக அவரே சமீபத்திய பேட்டிகளில் கூறி வருகிறார்.
தற்போது ‘நேர்கொண்ட பார்வை’ படம் மூலம் தமிழ் சினிமாவில் எண்ட்ரியாகியிருக்கும் வித்யா பாலன், நல்ல கதைகளாக இருந்தால் தொடர்ந்து தமிழில் நடிப்பேன், என்று தெரிவித்திருக்கிறார்.
இந்த நிலையில், வித்யா பாலன் சென்னையில் இருந்த போது அவரிடம் இயக்குநர் ஒருவர் தவறாக நடக்க முயற்சித்தாராம். அதாவது, அவரை ஓட்டல் அறைக்கு அழைத்தாராம்.
இது குறித்து பேட்டி ஒன்றில் கூறிய வித்யா பாலன், ”நான் சென்னையில் இருந்த போது என்னை சந்திக்க ஒரு இயக்குநர் வந்தார். காபி ஷாப்பில் அமர்ந்து பேசலாம் என கூறினேன். அதற்கு அவர், ”நிறைய பேசணும், ரூமுக்கு போவோம்” என்று கூறி, ரூமுக்கு செல்வதிலேயே குறியாக இருந்தார். நானும் ரூமுக்கு சென்று கதவை திறந்தே வைத்தேன். ஆனால், அந்த இயக்குநர் 5 நிமிடங்கள் மட்டுமே இருந்துவிட்டு கிளம்பி சென்றுவிட்டார்” என்று தெரிவித்தார்.
VR Dinesh and Kalaiyarasan’s recently released socio-political drama Thandakaaranyam is now streaming on Amazon Prime Video, and the film is witnessing a fresh wave of attention and conversations across India...
ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் மற்றும் டர்மெரிக் மீடியா தயாரிப்பில் உருவாகி, பரவலாக பாராட்டப்பட்ட ’அமரன்’ திரைப்படம், கோவாவில் நடைபெறும் 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் (IFFI) இந்தியன் பனோரமா பிரிவில் தொடக்க திரைப்படமாக அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது...
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு அறிமுகமாகி உச்ச நடிகர்களாக உயர்ந்தவர்கள் போல், தானும் உச்சத்தை தொட்டு விடலாம் என்ற நம்பிக்கையோடு வெள்ளித்திரையில் நுழைந்த கவின், ஒரு வெற்றி படத்தை கொடுத்து விட்டு தனது செயலில் அதிரடி காட்ட தொடங்கினார்...