நயன்தாராவை வைத்து படம் எடுத்தவர் திடீர் கைது!
Tuesday August-27 2019

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார், தென்னிந்திய சினிமாவின் நம்பர் ஒன் நடிகை, அதிகம் சம்பளம் வாங்கும் தென்னிந்திய நடிகை உள்ளிட்ட பல்வேறு பெருமைகளோடு வலம் வரும் நயன்தாரா, தற்போது ரஜினியின் ‘தர்பார்’ படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார்.

 

இந்த நிலையில், நயன்தாராவை வைத்து ‘அறம்’ என்ற வெற்றிப் படத்தை இயக்கிய கோபி நயினார் போலீசாரால் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

 

வேதாரண்யத்தில் இரு தரப்புக்கு இடையே ஏற்பட்ட மோதலில், அப்பகுதியில் இருந்த அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டது. இதற்கு பலர் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில், இயக்குநர் கோபி நயினார், திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் போராட்டம் நடத்தினார்.

 

Gopi Nayinar

 

போராட்டம் நடப்பதை அறிந்த மீஞ்சூர் போலீஸார், அனுமதி வாங்காமல் போராட்டம் நடத்துவதாக கூறி, போராட்டத்தை நிறுத்தியதோடு இயக்குநர் கோபி நயினாரையும் கைது செய்தனர்.

Related News

5547

தமிழ் சினிமாவில் நல்ல மாற்றங்கள் வரும் - ஜி.கே.எம்.தமிழ்குமரன் உறுதி
Monday March-16 2026

ஏசிஎம் சினிமாஸ் சார்பில் சூரியகலா சந்திரமூர்த்தி தயாரிக்க,   திரைப்பட கல்லூரி மாணவரான ஜெகன் ராயன் எழுதி இயக்கியுள்ள படம் ’ரூம் பாய்’...

75 நாட்களை கடந்த ‘சிறை’!- படக்குழுவின் வெற்றி கொண்டாட்டம்
Saturday March-14 2026

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் எஸ்...

Recent Gallery