தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார், தென்னிந்திய சினிமாவின் நம்பர் ஒன் நடிகை, அதிகம் சம்பளம் வாங்கும் தென்னிந்திய நடிகை உள்ளிட்ட பல்வேறு பெருமைகளோடு வலம் வரும் நயன்தாரா, தற்போது ரஜினியின் ‘தர்பார்’ படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார்.
இந்த நிலையில், நயன்தாராவை வைத்து ‘அறம்’ என்ற வெற்றிப் படத்தை இயக்கிய கோபி நயினார் போலீசாரால் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
வேதாரண்யத்தில் இரு தரப்புக்கு இடையே ஏற்பட்ட மோதலில், அப்பகுதியில் இருந்த அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டது. இதற்கு பலர் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில், இயக்குநர் கோபி நயினார், திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் போராட்டம் நடத்தினார்.
போராட்டம் நடப்பதை அறிந்த மீஞ்சூர் போலீஸார், அனுமதி வாங்காமல் போராட்டம் நடத்துவதாக கூறி, போராட்டத்தை நிறுத்தியதோடு இயக்குநர் கோபி நயினாரையும் கைது செய்தனர்.
சிவகார்த்திகேயன் புரொடக்சன்ஸ் வழங்கும் இயக்குநர் ராஜவேல் இயக்கத்தில் நடிகர்கள் தர்ஷன், காளி வெங்கட், ஆர்ஷா பைஜூ உள்ளிட்டப் பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'ஹவுஸ் மேட்ஸ்'...
18 கிரியேட்டர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சசிகலா பிரபாகரன் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் பாலாஜி செல்வராஜ் இயக்கத்தில், நடிகர் சரவணன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடிக்க, நீதிமன்ற வழக்கின் பின்னணியில், அசத்தலான இணையத் தொடராக ZEE5-ல் 2025 ஜூலை 18 ஆம் தேதி வெளியான ‘சட்டமும் நீதியும்’ தொடர், ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று, வெற்றியடைந்துள்ளது...
தமிழரசன் தியேட்டர் தயாரிப்பில், தமிழ்மாமணி துரை பாலசுந்தரம் இயக்கத்தில், தமிழில் 35 வருடங்களுக்குப் பிறகு புராணக்கதையை மையமாக வைத்து உருவாகியுள்ள படம் ’ராகு கேது’...