மாட்டுக்கறி சாப்பிடுவதற்கு ஆதரவாகவும், எதிராகவும் நாட்டில் பலர் குரல் கொடுத்து வர, பிரபல மலையாள நடிகை சுரபி லட்சுமி, மாட்டுக் கறிக்கு ஆதரவாக பேசி பிரச்சினையில் சிக்கிக்கொண்டுள்ளார்.
கடந்த ஆண்டின் சிறந்த நடிகைக்கான தேசிய விருதை வென்ற சுரபி லட்சுமி, தனது பேஸ்புக் பக்கத்தில் வாழை இலையில் சாதம் பரிமாறி கறி விருந்து சாப்பிடுவதுபோல் புகைப்படம் வெளியிட்டிருந்தார். மேலும், கேரளாவில் கோழிக்கோட்டில் உள்ள குறிப்பிட்ட ஒரு ஓட்டலில் கிடைக்கும் மாட்டிறைச்சி தனக்கு மிகவும் பிடித்த உணவு என்றும் அவர் பதிவிட்டிருந்தார்.
சுரபியின் இந்த பதிவுக்கு லைக் போட்டது போல பலர் எதிர்ப்பும் தெரிவித்தனர். அதில் ஒருவர், “உங்கள் செலவில் நீங்கள் எந்த அழுக்கான செயலையும் செய்யலாம். அதை நாங்களும் பார்க்க வேண்டுமா?” என கூற, அவருக்கு அதிரடியாக பதளித்த சுரபி, “பசி என்பது அடிப்படை உணர்வு. நான் எப்போதெல்லாம் பசியாக இருக்கிறேனோ அப்போது நான் சாப்பிடப்போவது மாட்டு கறியா, கோழியா அல்லது பன்றிக்கறியா என்று கணக்கு பார்ப்பதில்லை. இந்த விவகாரம் நான் மாட்டு கறி சாப்பிட்டதால் வந்தது அல்ல. பண்டிகை நாளில் படம் வெளியானதால் வந்த பிரச்சினை என்று தெரிகிறது” என்று பதிவிட்டுள்ளார்.
இயக்குநர் ஷெரீஃப் தனது முதல் படமான ‘ரணம் அறம் தவறேல்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, இதயபூர்வமாக கற்பனை செய்த கதையை, தயாரிப்பாளர் ஜெய் கிரண் (ஆதிமூலம் கிரியேஷன்ஸ்) உறுதியுடன் கையில் எடுத்ததின் விளைவாக உருவானது ‘காந்தி கண்ணாடி’...
விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன்ஸ் தயாரிப்பில் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கும் சக்தி திருமகன் படத்தின் முன் வெளியீட்டு விழா 10...
’டார்லிங் - 2’(2016) ஹாரர் காமெடி படத்தையும், ’விதிமதி உல்டா’ (2017) திரில்லர் படத்தையும் தயாரித்து கதாநாயகனாகவும் நடித்து தமிழ்த் திரையுலகிற்கு புதிய கதாநாயகனாகவும், தயாரிப்பாளராகவும் அறிமுகமானவர் ரமீஸ் ராஜா...